Friday, April 9, 2021

வேத எதிர்ப்பே சித்தர் மரபு

 சித்தர்மரபு என்னும் வேத எதிர்ப்பு மரபு ❤️


சதுர்வேதம் ஆறுவகைச் சாத்திரம் பல

தந்திரம் புராணங்கலை சாற்றும் ஆகமம்

விதம் வித மானவனான வேறு நூல்களும்

வீணான நூல்களை என்று ஆடு பாம்பே.


                                     - (பாம்பாட்டிச் சித்தர்)


பொய் வேதம் தன்னைப் பாராதே - அந்தப்

போதகர் சொற்புத்தி போத வாராதே


                                      - (கடுவெளிச் சித்தர்)


பார்ப்பனர்கள் கட்டிய பாழான வேதத்தைச்

சோதித்துத் தள்ளடி - குதம்பாய்

சோதித்துத் தள்ளடி            


                                      - (குதம்பைச் சித்தர்)


நேமங்கள் நிட்டைகள் 'வேதங்கள்' ஆகம நீதிநெறி ஓமங்கள் தர்ப்பணம் சந்தி செபமந்திர யோக நிலை நாமங்கள் சந்தனம் வெண்ணீறு பூசி நலமுடனே

சாமங்கள் தோறும் இவர்செய்யும் பூசைகள் சர்ப்பனையே


                                     - (பட்டினத்தார்)


சாத்திரத்தைச் சுட்டு சதுர்மறையப் பொய்யாக்கிச் சூத்திரத்தைக் கண்டு துயர் அறுப்பது எக்காலம்


                                      - (பத்திரகிரியார்)




No comments:

Post a Comment