சித்தர்மரபு என்னும் வேத எதிர்ப்பு மரபு ❤️
சதுர்வேதம் ஆறுவகைச் சாத்திரம் பல
தந்திரம் புராணங்கலை சாற்றும் ஆகமம்
விதம் வித மானவனான வேறு நூல்களும்
வீணான நூல்களை என்று ஆடு பாம்பே.
- (பாம்பாட்டிச் சித்தர்)
பொய் வேதம் தன்னைப் பாராதே - அந்தப்
போதகர் சொற்புத்தி போத வாராதே
- (கடுவெளிச் சித்தர்)
பார்ப்பனர்கள் கட்டிய பாழான வேதத்தைச்
சோதித்துத் தள்ளடி - குதம்பாய்
சோதித்துத் தள்ளடி
- (குதம்பைச் சித்தர்)
நேமங்கள் நிட்டைகள் 'வேதங்கள்' ஆகம நீதிநெறி ஓமங்கள் தர்ப்பணம் சந்தி செபமந்திர யோக நிலை நாமங்கள் சந்தனம் வெண்ணீறு பூசி நலமுடனே
சாமங்கள் தோறும் இவர்செய்யும் பூசைகள் சர்ப்பனையே
- (பட்டினத்தார்)
சாத்திரத்தைச் சுட்டு சதுர்மறையப் பொய்யாக்கிச் சூத்திரத்தைக் கண்டு துயர் அறுப்பது எக்காலம்
- (பத்திரகிரியார்)
No comments:
Post a Comment