தமிழிசைப்பதிகம் பாடவைத்த இராசராசன்
இராசராசன் காத்த தமிழிசைப்பண்களையும், கோயில்களில் தமிழிசையை பாடச்செய்தல் வேண்டும்.
வெளிச்சுற்றின் மதிலில் வெளிப்புறத்தில் வடமேற்கு மூலையிலுள்ள #_கல்வெட்டு:
ஸ்வஸ்தி ஸ்ரீ திருமகள்போலப் பெருநிலச்செவ்வியும் தனக்கே யுரிமைபூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி வெங்கைநாடு கங்கபாடியும் தடிகைபாடியும் நுளம்பபாடியும் குடமலைநாடுங் கொல்லமுங் கலிங்கமும் முரட்டெழில் சிங்களர் ஈழமண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் முன்னீர்ப் பழந்தீவு பன்னீராயிரமும் திண்டிறல்வென்றித் தண்டாற்கொண்ட தன்னெழில் வளரூழியுளெல்லாயாண்டுந் தொழுதகவிளங்கும் யாண்டேசெழியரைத் தேசுகொள் கோராஜகேஸரி வர்ம்மரான ஸ்ரீ ராஜராஜதேவர்க்கு யாண்டு இருபத்தொன்பதாவதுவரை உடையார் ஸ்ரீ ராஜராஜீஸ்வரம் உடையாருக்குத் திருப்பதியம் விண்ணப்பம்செய்ய உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் குடுத்த பிடாரர்கள் நாற்பத்தெண்மரும் இவர்களிலே நிலையாய் உடுக்கை வாசிப்பான் ஒருவனும் இவர்களிலே நிலையாய்க் கொட்டி மத்தளம்வாசிப்பான் ஒருவனும் ஆக ஐம்பதின் மர்க்குப்பெயரால் நிசதம் நெல்லு முக்குறுணி நிவந்தமாய் ராஜகேஸரியோடொக்கும் ஆடவல்லானென்னும் மரக்காலால் உடையார் உள்ளுர்ப்பண்டாரத்தேய் பெறவும் இவர்களில் செத்தார்க்கும் அநாதேசம்போனார்க்கும் தலைமாறு அவ்வவர்க்கு அடுத்தமுறை கடவார் அந்நெல்லுப்பெற்றுத் திருப்பதியம் விண்ணப்பஞ்செய்யவும் அவ்வவர்க்கு அடுத்தமுறை கடவார் தாந்தாம்யோக்யர் அல்லாதுவிடில் யோக்யராயிருப்பாரை ஆளிட்டுத் திருப்பதியம் விண்ணப்பஞ்செய்வித்து அந்நெல்லுப்பெறவும் அவ்வவர்க்கு அடுத்தமுறை கடவாரின்றியொழியில் அந்த நியாயத்தாரே யோக்யராயிருப்பாரை திருப்பதியம் விண்ணப்பஞ்செய்ய இட்டு இட்ட அவனே அவ்வர் பெறும்படி நெல்லுப்பெறவும் ஆக இப்படி உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் திருவாய் மொழிந்தருளின படி கல்லில் வெட்டியது.
அந்த ஐம்பதின்மர்:
1. பாலன் திருவாஞ்சியத்தடிகளான ராஜராஜப்பிச்சனானசதாசிவனுக்கு.
2. திருவெணாவல் செம்பொற்சோதியான தக்ஷிணமேருவிடங்கப்பிச்சனான ஞாநசிவனுக்கு
3. பட்டாலகன் அம்பலத்தாடியான மனோத்தமசிவனுக்கு
4. பட்டாலகன் சீருடைக்கழலான பூர்வ்வசிவனுக்கு
5. பொற்சுவரன் திருநாவுக்கரையனான பூர்வ்வசிவனுக்கு
6. மாதேவன் திருநானசம்பந்தனான ஞானசிவனுக்கு
7. கயிலாயன் ஆரூரனான தர்ம்மசிவனுக்கு
8. செட்டி எடுத்தபாதமான சதாசிவனுக்கு
9. ராமன் சம்பந்தனான சத்யசிவனுக்கு
10. அம்பலவன் பத்தர்கள்டனான வாமசிவனுக்கு
11. கம்பன் திருநாவுக்கரையனான சதாசிவனுக்கு
12. நக்கன் சீராளனான வாமசிவனுக்கு
13. அப்பி திருநாவுக்கரையனான நேத்ரசிவனுக்கு
14. சிவக்கொழுந்து சீராளனான தர்ம்மசிவனுக்கு
15. ஐஞ்ஞூற்றுவன் வெண்கடனான சத்பசிவனுக்கு
16. அரையன் அணுக்கனான திருமறைக்கானான தர்ம்மசிவனுக்கு
17. அரையன் அம்பலக்கூத்தனான ஓங்காரசிவனுக்கு
18. ஆரூரன் திருநாவுக்கரையனான ஞாநசிவனுக்கு
19. கூத்தன் மழலைச்சிலம்பான பூர்வ்வசினுக்கு
20. ஐஞ்ஞூற்றுவன் சீயாரூரான தத்புருஷசிவனுக்கு
21. சம்பந்தன் ஆரூரனான வாமசிவனுக்கு
22. அரையன் பிச்சனான தர்ம்மசிவனுக்கு
23. காஸ்யபன் எடுத்தபாதப்பிச்சனான உருத்ரசிவனுக்கு
24. சுப்பிரமண்யன் ஆச்சனான தர்ம்மசிவனுக்கு
25. கூத்தன் அமரபுஜங்கனான சத்யசிவனுக்கு
26. வெண்காடனான அகோரசிவனுக்கு
27. மாதேவன் திருநாவுக்கரையனான விஜ்ஞாநசிவனுக்கு
28. கூத்தன் வெண்காடனான உருத்ரசிவனுக்கு
29. ஐஞ்ஞூற்றுவன் திருவாய்மூரான அகோரசிவனுக்கு
30. திருமலைக்கூத்தனான வாமசிவனுக்கு
31. ஐஞ்ஞூற்றுவன் எடுத்தபாதமான தர்ம்மசிவனுக்கு
32. அரையன் தில்லைக்கரைசான பூர்வ்வசிவனுக்கு
33. காளிசம்பந்தனான தர்ம்மசிவனுக்கு
34. காபாலிகவாலியான ஞாநசிவனுக்கு
35. வெண்காடன் நமசிவாயமான உருத்ரசிவனுக்கு
36. சிவனனந்தனான யோகசிவனுக்கு
37. சிவக்கொழுந்து சம்பந்தனான அகோரசிவனுக்கு
38. இராமன் கணவதியான ஞாநசிவனுக்கு
39. பிச்சன் வெண்காடனான அகோரசிவனுக்கு
40. மறைக்காடன் நம்பிஆரூரனான ஞாநசிவனுக்கு
41. சோமன்சம்பந்தனான ஞாநசிவனுக்கு முக்குறுணி
42. சத்திதிருநாவுக்கரையனான ஈசானசிவனுக்கு
43. பொற்சுவரன் நம்பியாரூரனான தர்ம்மசிவனுக்கு
44. ஆச்சன் திருநாவுக்கரையனான நேத்ரசிவனுக்கு
45. ஐயாறன் பெண்ணோர்பாகனான இருதயசிவனுக்கு
46. ராஜாதித்தன் அம்பலத்தாடியான சிகாசிவனுக்கு
47. செல்வன் கணவதிதெம்பனான தர்ம்மசிவனுக்கு
48. கூத்தன் தில்லைக்கூத்தனான ஞாநசிவனுக்கு
49. உடுக்கைவாசிக்கும் த்வேதைகோம்புரத்து தத்தய கிருமவித்தன்மகன் சூர்யதேவனுக்கு கிருமவித்தனான ஆலவிடங்க உடுக்கை விஜ்ஜாதிரனான சோமசிவனுக்கு
50. கொட்டி மத்தளம்வாசிக்கும் குணப்புகழ்மருதனான சிகாசிவனுக்கு
நன்றி. வணக்கம்.
தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்
No comments:
Post a Comment