முருகன் சீற்றத்தான் 💪
முருகனை அழகனென்றும், இளைஞனென்றும், மறவனென்றும் கேள்வியுற்றிருப்போம். ஆனால், அவன் பெருஞ்சினமுடையவனென்றும் பகர்கின்றன தமிழவை இலக்கியங்கள்.
"முருகற் சீற்றத் துருகெழு குருசில்"
--- புறநானூறு - 16
"முருகற் சீற்றத் துருகெழு குருசில்"
--- பொருநராற்றுப்படை - 131
"முருகி னன்ன சீற்றத்துக் கடுந்திறல்"
--- அகநானூறு - 158
இன்னும் மிகுதியான சான்றுகளிருக்கும். ஆனால், அடியேன் படிக்கும்போது கிடைத்தவை இம்மூன்று சான்றுகள்.
நன்றி. வணக்கம்.
மாயோள் 🖤
"மாயோள்முன்கை யாய்தொடி"
(பொருநராற்றுப்படை 14)
"மாயோள் பசலை நீக்கினன்"
(ஐங்குறுநூறு - 145)
"ஒடுங்கீ ரோதி மாஅயோளே"
(அகநாநூறு - 86).