Monday, November 16, 2020

புறம் 330 - மதுரை கணக்காயனார்

 புறநானூறு 330 : 🌺


மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரர் பாடிய தமிழவைப் பாடல்களை நாம் கண்டுள்ளோம். ஆனால், அந்த நக்கீரரின் தந்தையார் மதுரை கணக்காயனார் பாடிய பாட்டைக் கேள்வியுறவில்லை. இதோ அவர் பாடிய ஓர் புறப்பாட்டு.




பாடியவர் : மதுரை_கணக்காயனார்

திணை : வாகை

துறை : மூதின் முல்லை


வேந்துடைத் தானை முனைகெட நெரிதர

ஏந்துவாள் வலத்தன் ஒருவன் ஆகித்,

தன்இறந்து வாராமை விலக்கலின், பெருங்கடற்கு

ஆழி அனையன் மாதோ; என்றும்

பாடிச் சென்றோர்க்கு அன்றியும், வாரிப்

புரவிற்கு ஆற்றாச் சீறூர்த்

தொன்மை சுட்டிய வண்மை யோனே.


விளக்கம் :

அவன் ஒருவனே அவனுக்கு ஈடு. வேந்தும் அவனது படையும் முனைந்து முன்னேறிக்கொண்டிருந்தன. அவன் எதிர்த்து நின்றான். தன்னைக் கடந்து வரமுடியாதபடி எதிர்த்து நின்றான். கடல் சீற்றத்ததைத் தடுக்கும் ஆழிச்சக்கரம் போல நின்றான். அவன் இப்படி என்றால், அவன் ஊரும் இப்படித் திகழ்ந்தது. பாடிச் சென்றோர்கெல்லாம் கொடுத்தும், வாரி வழங்குவதற்கெல்லாம் ஈடுகொடுத்தும் திகழ்வது அவன் சிற்றூர்.


நன்றி. வணக்கம் 🙏

No comments:

Post a Comment