அவாவறுத்தல்
அவாவறுத்தலைப்பற்றி சான்றோர் உரைத்தவை:
திருவள்ளுவர்-369
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.
விளக்கம்:
ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்.
புத்தர் :
ஆசையே துன்பத்திற்குக் காரணம், ஆசையைத் துறந்தால் துன்பத்திலிருந்து விடுபடலாம்.
திருமூலர் - 2615
ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.
No comments:
Post a Comment