Monday, March 8, 2021

கீதையிலும் மனுநீதியிலும் பெண்கள்

 மனுஅநீதியில் பெண்கள்


மகளிர்நாளை யார் கொண்டாடலாம்? தமிழர்கள் கொண்டாடலாம், இரசிய, ஐரோப்ப, செர்மானியர்கள் கொண்டாடலாம். பெண்மையை மதிக்கும் எந்த இனமும் கொண்டாடலாம். ஆனால், ஆரியமும் ஆரியச்சார்பும் உடையவர்கள் கொண்டாடலாமா? பெண்ணை இழிபிறவி என்று கூறி ஒடுக்கியது ஆரியம். அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது மகளிர்நாளைக் கொண்டாட? 😡😡😡


பெண்களைப்பற்றி_பகவான்_கிருட்டிணர்:😡




பகவத்கீதையின் 9ஆவது அத்தியாயத்தில் சுலோகம் 32 இப்படிச் சொல்கிறது.


"மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்யயே அபிஸ்யு பாப யோனய ஸ்திரியோ வைச்யாஸ்ததா சூத்ராஸ்தே அபியாந்திபராம் கதிம்"


அதாவது பெண்களும் சூத்திரர்களும் வைசிகர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள். தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பகவத்கீதைகளில் "பாவ யோனி" என்பதை "கீழான பிறப்பு", "இழி பிறப்பு" என்று மொழி பெயர்த்துள்ளார்கள். ஆங்கிலத்தில் நேரடியாகவே "born out of the womb of sin" என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள்.


பகவத் கீதையின் பார்வையிலும் பெண் என்பவள் இழி பிறப்புத்தான். அவள் ஒரு பார்ப்பன வீட்டில் பிறந்திருந்தாலும், அது செல்லுபடியாகாது.


கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் ஒன்று புரியும். சூத்திரர்களுக்கு மறுக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான உரிமைகள் பெண்களுக்கும் மறுக்கப்பட்டுள்ளது.


முற்பிறப்பில் செய்த பாவத்தின் பயனாகத்தான் ஒருவன் பெண்ணாகவோ சூத்திரனாகவோ பிறக்கிறான் என்றுதான் இந்துமத வேதங்கள் சொல்கின்றன. அந்த வகையில் சூத்திரர்களை இழிவுபடுத்துகின்ற வேதங்கள், சாத்திரங்கள், மந்திரங்கள் போன்றவை பெண்களையும் இழிவுபடுத்துவதில் வியப்பு ஒன்றும் இல்லை.


கீதையில் 4, 5 இடங்களில் மட்டுமே பெண்களைப் பற்றி குறிப்பிடுகின்றனர். அத்தனை இடங்களிலும் பெண்கள் பாவயோனியில் பிறந்தவர்கள், இழிபிறவிகள், ஆணுக்கு அடிமையானவள் என்றே இழித்துக்கூறப்படுகிறாள்.


இவ்விழிநூல் கீதை இப்படி பெண்களை இழிவுபடுத்தும் நிலையில் பெண்களே தற்காலத்தில் இந்நூலை புனிதனமானதென்று கருதி படித்துக்கொண்டிருப்பதுதான் பேரவலம். அறமுடைய எவரும் இவ் இழிநூலைப் புனிதநூலென்று கருதலாகுமா?

No comments:

Post a Comment