Wednesday, September 11, 2019

தமிழர்விழவு திருவோண நன்னாள்

தமிழர்விழவு திருவோண நன்னாள்:


உலகத்தமிழர்கட்கு ஓணநன்னாள் வாழ்த்துகள். திருவோணத்திருவிழவு தமிழரின் நன்னாள் என்பதற்குக் கிடைக்கும் சான்றுகளான சில :

மதுரைக்காஞ்சி, பெரியாழ்வாரின் திருப்பால்லாண்டு, திருஞானசம்பந்தரின் திருக்கடைக்காப்பு ஆகியனவாகும்.



தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடிய மதுரைக்காஞ்சி 590 முதல் 605 அடிகள் வரை :


"கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்
மாயோன் மேய #_வோண_நன்னாள்
கோணந் தின்ற வடுவாழ் முகத்த
சாணந் தின்ற சமந்தாங்கு தடக்கை
மறங்கொள் சேரி மாறுபொரு செருவில்
மாறா துற்ற வடுப்படு நெற்றிச்
சுரும்பார் கண்ணிப் பெரும்புகன் மறவர்
கடுங்களி றோட்டலிற் காணுநர் இட்ட
நெடுங்கரைக் காழகம் நிலம்பர லுறுப்ப
கடுங்கட் டேறன் மகிழ்சிறந்து திரிதர
கணவ ருவப்பப் புதல்வர்ப் பயந்து
பணைத்தேந் திளமுலை யமுத மூறப்
புலவுப்புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு
வளமனை மகளிர் குளநீர் அயரத்
திவவுமெய்ந் நிறுத்துச் #_செவ்வழி பண்ணிக்
குரல்புணர் நல்யாழ் முழவோ டொன்றி"

***********************************

நாலாயிரப்பனுவலில் பெரியாழ்வாரின் திருப்பால்லாண்டு :


எந்தைதந்தைதந்தை தந்தைதம்மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி
வந்துவழிவழிஆட்செய்கின்றோம் #_திருவோணத்திருவிழவில்
அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தவனை
பந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றுபாடுதமே. 6

உடுத்துக்களைந்த நின்பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்ததுழாய் மலர்சூடிக்களைந்தன சூடும்இத்தொண்டர்களோம்
விடுத்ததிசைக்கருமம்திருத்தித்
#_திருவோணத்திருவிழவில்
படுத்தபைந்நாகணைப் பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டுகூறுதுமே. 9

***********************************

திருஞானசம்பந்தரின் திருக்கடைக்காப்பு:


"மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி #_ஓண_விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்”

{ஐப்பசியில் ஓணவிழவு கொண்டாடியதாக சம்பந்தர் குறிப்பிடுகிறார்}

************************************

தரவு நூல்கள் :
1. மதுரைக்காஞ்சி
2. நாலாயிரப்பனுவல், மற்றும்
3. தேவாரம்

தொகுப்பு : தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

No comments:

Post a Comment