Tuesday, September 8, 2020

கப்பலோட்டிய தமிழரின் தமிழ்ப்பணிகள்

 கப்பலோட்டிய தமிழரின் தமிழ்ப்பணி 🙏


வ.உ.சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரனார் பிறந்தநாள் இன்று (05.09). பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு சுதேசி நீராவிக்கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், விடுதலைப் போராட்ட வீரர். ஐயாவின் தமிழ்ப்பணியைக் காண்போம். 




இயற்றிய நூல்கள் :


இயற்றிய நான்கு நூல்களுமே கவிதைகளால் ஆனவைதான். அவை


1. மெய்யறம் 1914

2. மெய்யறிவு 1915

3. பாடல் திரட்டு 1915

4. சுயசரிதை 1946


உரைகண்ட நூல்கள் :


1. இன்னிலை 1917

2. சிவஞானபோதம் 1935

3. திருக்குறள் 1935


பதிப்பித்த நூல்கள் :


1. திருக்குறள் (மணக்குடவருரை) - 1917

2. தொல்காப்பியப் பொருளதிகாரம் 

    (இளம்பூரணனாருரை) - 1928


மொழிபெயர்த்த நூல்கள் :


1. மனம் போல் வாழ்வு - 1909

2. அகமே புறம் - 1914

3. வலிமைக்கு மார்க்கம் - 1916

4. சாந்திக்கு மார்க்கம் - 1934


********

நன்றி. வணக்கம்

உதவி : இணையம்

No comments:

Post a Comment