களிற்றைக்கொல்லும் யாளி:
ஆளி நன்மா னணங்குடைக் குருளை
மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி
முலைக்கோள் விடாஅ மாத்திரை ஞெரேரெனத்
தலைக்கோள் வேட்டங் களிறட் டாஅங்கு
- முடத்தாமக்கண்ணியார் பாடிய
பொருநராற்றுப்படை - 139 முதல் 142 அடிகள்
உரை :
யாளியாகிய சிறந்த விலங்கின் வருத்துதலையுடைய குருளையின், கூற்றுவனுடையவலியைக்காட்டிலும் மிகுகின்ற வலியாலே செருக்குக்கொண்டு, முலையுண்ணுதலைக் கைவிடாத இளம்பருவத்தில் விரைவாக, முதன்முதலிற் கொள்வதற்குக் காரணமான வேட்டையிற் களிற்றைக்கொன்றாற் போல, (கரிகாற்சோழன் தன் இளம் பருவத்திலேயே சேரனையும் பாண்டியனையும் வெண்ணிப்போரில் வெற்றிகொண்டான்).
நூல் : பொருநராற்றுப்படை
நன்றி. வணக்கம்
தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்
No comments:
Post a Comment