Thursday, January 21, 2021

தமிழே இறைமொழி - தெய்வத்தமிழ்

இறைவன் தமிழை ஏற்கமாட்டானா?


சமற்கிருதத்தில் தான் குழமுழுக்கு நடத்தவேண்டுமென்று சமற்கிருதத்தில் எழுதாமல் தமிழில் தான் எழுதுகிறார்கள் அறிவிலிகள். சமற்கிருதத்திலேயே எழுதியிருக்கலாமே, எதற்குத் தமிழில் எழுதவேண்டும்? சமற்கிருதத்திலேயே பேசலாமே? எதற்கு தமிழ் தேவைப்படுகிறது இவ்வஞ்சகர்களுக்கு? ஏன் தமிழைப் பயன்படுத்தவேண்டும்?




ஆரியன், அவன் மொழியில் வணங்கட்டும், தமிழர்கள் தம் தமிழ்மொழியில் வணங்குங்கள். செத்தமொழியிடம் எதற்குக் கடன்வாங்கவேண்டும்? இதுவரை யாரும் இதைச்செய்யவில்லையென்று நீங்கள் மறுப்பீராயின், இனிமேல் தமிழில் செய்வோம்.


ஒழிக ஆரியம், ஒழிக வேதம், ஒழிக செத்தமொழி சமற்கிருதம்.


என்றும் நற்றமிழே வாழ்க.


தமிழில் குடமுழுக்குச் செய்யவேண்டாம் என்று இறைவன் சொன்னால், என்மொழி அவனுக்கு தெரியாதென்றால் அவன் எனக்கு இறைவனே ஆகான். தமிழ்க்குடமுழுக்கை மறுப்பானானால் அவ்விறைவனே வந்துசொல்லட்டும். சொல்வானா எம்மிறைவன்? ஒருக்காலுமில்லை.


ஏனெனில்,


"வண்தமிழ்கொண்டு இன்பமர வல்லார்களைத் தன்னை எய்துவிப்பவன்"

                                      - ஞானசம்பந்தர்


"பண்ணிடைத் தமிழொப்பானவன்"

                                                 - அப்பர்


"நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர்முன் தாளம் ஈந்தவன் பாடலுக்கு இறங்கும் தன்மையாளன்"

                                           - நம்பியாரூரர்


"தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டான்"


"உயர்மதில் கூடலின் ஆய்ந்தஒண் தீந்தமிழின்

துறைவாய் நுழைந்தவன்"

                                           - மணிவாசகர்


"செந்தமிழ் மலர் சூடுபவன்" - சேந்தனார்


"ஆரணத்தேன் பருகிஅருந் தமிழ்மாலை கமழவரும்

காரணத்தின் நிலைபெற்ற கருவூரன் தமிழ்மாலை சூடுபவன்"

                    - கருவூரார்


"தன்னை நன்றாகத் தமிழ்செய்யுமாறு படைத்தவன்"

                                                - திருமூலர்


"செந்தமிழ் செப்பியவர்களைத் தன்னடியடைவைத்து இன்பம் எய்துவிப்பவன்"

                           -- இறைவனால் அம்மையே என்றழைக்கப்பட்ட காரைக்காலம்மையார்.


"ஒண்முத்தமிழ் பயந்தவன்"

                   - நம்பியாண்டார் நம்பிகள்


"அர்ச்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண் மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக என்றவர்"

                                        - தெய்வச்சேக்கிழார்


"சொல்லார் தமிழிசை பாடிய தொண்டன் தனை இன்னும் பல்லாறு உலகினில் நம் புகழ் பாடு" என்றவன்"

                                          - தெய்வச்சேக்கிழார்


திருமுறையே சைவநெறிக் கருவூலம்

தென்தமிழின் தேன்பா காகும்

திருமுறையே கயிலையின் கண் சிவபெருமான்

செவிமடுத்த செந்தமிழ் வேதம்

திருமுறையே நடராசன் கரம் வருந்த

எழுதியருள் தெய்வ நூலாம்

திருமுறையே சொக்கேசன் மதிமலிவாய்

மலர்ந்தருளும் சிறப்புற்றாமால்.


இப்படிச் சிவநெறியருளாளர்கள் தம்திருவாய்மலர்ந்து தமிழுக்கே இறைவன் செவிசாய்ப்பான் என்று ஐயமற நிறுவியுள்ளனர். இனி எவராவது, இறைவன் தமிழை

ஏற்கமாட்டான் என்று கூறுவாரானால் அவர்களின் நாவையறுத்துத் தீயிலிடுவேன்.


*********

தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏

நன்றி. வணக்கம்

தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

No comments:

Post a Comment