ஆட்டுகிடாவின் குருதிகலந்து செந்தினை தூவி முருகவழிபாடு - முறுகாற்றுப்படுத்துதல் :
சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்
(திருமுருகாற்றுப்படை - 46)
சூர்மருங்கு அறுத்த சுடரிலை நெடுவேல்;
சினம்மிகு முருகன் தண்பரங் குன்றத்து
அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை (அகநானூறு - 59)
"சேயோன் மேய மைவரை உலகமும்"
- தொல்காப்பியம்
குருதியொடு தூவெள்ளரிசி பலியிடல்
🌺🌺🌺
குருதியோடு செந்தினை கலந்து பரப்பி முருகியப்பறை முழக்கி முருகாற்றுப்படுத்தும் குறமகள் 🙏🌺🌺🌺🙏
"மதவலி நிலைஇய மாத்தாட் கொழவிடைக்
குருதியொடு விரைஇய தூவெள் ளரிசி
சில்பலிச் செய்து பல்பிரப் பிரீஇச்
சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப்
பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை
துனையுற அறுத்துத் தூங்க நாற்றி
நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி
நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி
இமிழிசை அருவியொடு இன்னியம் கறங்க
உருவப் பல்பூத் தூஉய் வெருவரக்
குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள்
முருகியம் நிறுத்து முரணினர் உட்க
முருகாற்றுப் படுத்த உருகெழு வியனகர்
ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன்
கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட”
- திருமுருக்காற்றுப்படை 232 - 248 அடிகள்
பிணிமுகம் - யானை
(யானையை ஊர்தியாகக்கொண்ட முருகன்)
ஆட்டின் குருதிகலந்த தினையைப் பலியாக ஏற்கும் வேலன் :
சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊரூர் கொண்ட சீர்கெழு விழலினு
மார்வல ரேத்த மேலரு நிலையினும்
வேலன் றைஇய வெறியயர் களனுங்
- திருமுருகாற்றுப்படை
செந்தினை குருதியொடு தூவி முருகாற்றுப்படுத்தல் :
களம் நன்கு இழைத்துக் கண்ணி சூட்டி,
வளநகர் சிலம்பப் பாடிப்பலி கொடுத்து,
உருவச் செந்தினை குருதியொடு தூஉய்,
முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்
(அகநானூறு 22)
நன்றி. வணக்கம்.
தொகுப்பு : தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்
No comments:
Post a Comment