Thursday, February 18, 2021

எது மந்திரம்? தொல்காப்பியர், திருவள்ளுவர் விளக்கங்கள்

தொல்காப்பியரும் வள்ளுவரும்: மந்திரம்🙏


தொல்காப்பியர் சொன்ன கருத்தை, அவர்வழியில் வள்ளுவரும் அதே கருத்தை சொல்லியிருக்கிறார்.





தொல்காப்பியம்,

பொருளதிகாரம், செய்யுளியல்-1425


நூற்பா:

'நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்

மறைமொழிதானே மந்திரம்' என்ப.


உரை:

நிறைந்த மொழியையுடைய மாந்தர் தமதாணையாற் சொல்லப்பட்ட மறைசொல்லே மந்திரம் என்பதாகும்.


திருக்குறள், அறம், பாயிரம், நீத்தார்பெருமை - 28


நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்.


விளக்கம்:

நிறைவான வாக்குப்பெருமையுடைய மேன்மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன  மறைசொற்களே அடையாளம் காட்டிவிடும்.


************************


இருவேறு காலங்களில் வாழ்ந்த இறுவேறு தமிழ்ப்புலவர்களின் ஒன்றுபட்ட கருத்து. என்னே வியப்பு!!! தொல்காப்பியரை அப்படியே பின்பற்றியிருக்கிறார் வள்ளுவர்.


நன்றி. வணக்கம்.

தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்

No comments:

Post a Comment