தொல்காப்பியரும் வள்ளுவரும்: மந்திரம்🙏
தொல்காப்பியர் சொன்ன கருத்தை, அவர்வழியில் வள்ளுவரும் அதே கருத்தை சொல்லியிருக்கிறார்.
தொல்காப்பியம்,
பொருளதிகாரம், செய்யுளியல்-1425
நூற்பா:
'நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்
மறைமொழிதானே மந்திரம்' என்ப.
உரை:
நிறைந்த மொழியையுடைய மாந்தர் தமதாணையாற் சொல்லப்பட்ட மறைசொல்லே மந்திரம் என்பதாகும்.
திருக்குறள், அறம், பாயிரம், நீத்தார்பெருமை - 28
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
விளக்கம்:
நிறைவான வாக்குப்பெருமையுடைய மேன்மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மறைசொற்களே அடையாளம் காட்டிவிடும்.
************************
இருவேறு காலங்களில் வாழ்ந்த இறுவேறு தமிழ்ப்புலவர்களின் ஒன்றுபட்ட கருத்து. என்னே வியப்பு!!! தொல்காப்பியரை அப்படியே பின்பற்றியிருக்கிறார் வள்ளுவர்.
நன்றி. வணக்கம்.
தனித்தமிழாளன் தமிழ் கோ விக்ரம்
No comments:
Post a Comment