நாட்டெல்லைகள் :
வடக்குத் திசைபூழி வான்கீழ்தென் காசி
குடக்குத் திசைகோழிக் கோடாம் - கடற்கரையின்
ஓரமே தெற்காகும் உள்ளெண் பதின்காதம்
சேரநாட் டெல்லையெனச் செப்பு.
கடல்கிழக்குத் தெற்குக் கரைபுரள் வெள்ளாறு
குடதிசையிற் கோட்டைக் கரையாம் - வடதிசையில்
ஏணாட்டு வெள்ளா றிருபத்து நாற்காதம்
சோணாட்டுக் கெல்லையெனச் சொல்.
வெள்ளா றதுவடக்காம் மேற்குப் பெருவழியாம்
தெள்ளாற் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார
ஆண்ட கடல்கிழக்காம் ஐம்பத் தறுகாதம்
பாண்டிநாட் டெல்லைப் பதி.
மேற்குப் பவளமலை வேங்கடம் நேர்வடக்காம்
ஆர்க்கு மூவரி அணிகிழக்கு - பார்க்குளுயர்
தெற்குப் பினாகி திகழிருப தின்காதம்
நற்றொண்டை நாடெனவே நாட்டு.
வடக்குத் தலைமலையாம் வைகாவூர் தெற்குக்
குடக்குவெள் ளிப்பொருப்புக் குன்று - கிழக்கு
கழித்தண் டலைசூழும் காவிரிநன் னாடா
குழித்தண் டலையளவும் கொங்கு.
**************
நன்றி. வணக்கம்
தனித்தமிழாளன்
No comments:
Post a Comment