இலக்கியத்தில் பறையின் பெயர்கள்:
தொல்காப்பியர், திணைகளின் கருப்பொருளை கீழுள்ள நூற்பாவில் தொகுக்கிறார். அவற்றுள் ஒன்று பறை.
"தெய்வம், உணாவே, மா, மரம், புள், #_பறை,
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ,
அவ்வகை பிறவும் கரு' என மொழிப". - 965
அவ்வகையில் பண்டைக்காலத்திருந்த சில பறையின் பெயர்களை ஈண்டு அறிவோம்..
குறிஞ்சி:
1. தொண்டகப்பறை2. முருகியப்பறை
3. வெறியாட்டுப்பறை
முல்லை :
4. ஏறுகோட்பறைமருதம் :
5. மணமுழாப்பறை6. நெல்லரிகிணைப்பறை
நெய்தல் :
7. நாவாய்ப்பறை8. மீன்கோட்பறை
பாலை :
9. ஆறலைப்பறை10. ஆறெரிப்பறை
11. சூறைகோட்பறை
இவையன்றி,
********
12. அரிப்பறை
13. ஆகுளிப்பறை
14. உவகைப்பறை
15. ஒருகண் பறை
16. கிணைப்பறை
17. குரவைப்பறை
18. குறும்பறை
19. கொடுகொட்டிப்பறை
20. கோட்பறை
21. சாக்காட்டுப்பறை
22. சாப்பறை
23. சிறுபறை
24. செருப்பறை
25. தடாரிப்பறை
26. தணிபறை
27. தலைப்பறை
28. துடிப்பறை
29. தெடாரிப்பறை
30. நிசாளப்பறை
31. பன்றிப்பறை
32. பூசறண்ணுமை
33. முழவுப்பறை
34. மென்பறை
35. வெறுப்பறை
{இதில், ஒரே பறைக்குப் பலபெயர்களுண்டு. அவற்றிற்குத் தனி எண்ணிட்டுள்ளேன்}
இத்தனை பறைகளையும் மறந்துவிட்டு, இன்று நாம் அறிந்திருப்பது சாக்காட்டுப்பறை, சாப்பறை என்னும் சாவுக்கு இசைக்கும் பறையை மட்டுமே.
நன்றி. வணக்கம்.
தொகுப்பு : தனித்தமிழாளன்
*****************
உதவிய நூல்கள்:
1. புறநானூறு2. தொல்காப்பியம்
3. சிலம்பு
4. நன்னூல்
5. இன்னுஞ்சில நூல்கள்
No comments:
Post a Comment