Monday, August 12, 2019

வள்ளுவர் வாக்கில் நட்பு

நட்பை பற்றி வள்ளுவர் உரைத்தவை :


மனிதனுக்கு நட்பென்பது எந்த அளவிற்கு இன்றியமையாததென்பதை விளக்கவே, திருவள்ளுவர் ஐந்து அதிகாரங்களில் ஐம்பது குறட்பாக்களைப்பாடி நட்பை வலியுறுத்தியுள்ளார்.




அதிகாரவெண் மற்றும் அதிகாரம்


௭௯) நட்பு (79)
௮०) நட்பாராய்தல் (80)
௮௧) பழைமை (81)
௮௨) தீநட்பு (82)
௮௩) கூடாநட்பு (83)

நட்பு : 

நட்பின் தன்மையையும் நட்பு எத்தகையதென்றும் நட்பின் சிறப்பை விளக்குகிறார்.

நட்பாராய்தல் : 

நன்கு ஆராய்ந்து நல்லவர்களோடு நட்புகொள்ளல் வேண்டுமென்று அறிவுறுத்துகிறார்.

பழைமை : 

பழைய நண்பர்களை விட்டுவிடக்கூடாதென்றும் அதன் சிறப்பையும் விளக்குகிறார்.

தீநட்பு :

தீயவர்களோடு நட்புகொள்ளக்கூடாதென்றும் அவர்களால் தீமையே ஏற்படும் என்று விளக்குகிறார்.

கூடாநட்பு : 

பொருந்தாத நட்பையும், யார்யாரிடம் நட்புகொள்ளக்கூடாதென்றும் அறிவுறுத்துகிறார்.

வேறு எதற்கும் வள்ளுவர் இத்தனை அதிகாரங்கள் படியாதாகத்தெரியவில்லை.

நட்பை சிறப்பிக்க நண்பர்கள் நாளைக் கொண்டாடும் வழக்கத்தை 1935ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசு தீர்மானம் நிறைவேற்றி ஆங்கிலேயன் கொண்டுவந்திருக்கலாம். ஆனால், மூவாயிரமாண்டுகளுக்கு முன்பே நட்பு என்பது யாது? அதன் தன்மை, அது எவ்வாறு இருக்கவேண்டும், எத்தகையோரிடம் நட்புகொள்ளக்கூடாது என்று நட்பிற்கு இலக்கணம் வகுத்து இத்தனை விரிவாக விளக்கிய நம் பேராசான் திருவள்ளுவரைப் பெற்றது தமிழத்தாய் பெற்ற பெரும்பேறேயாம். இதைப்போல் பழைய அறநூல் உலகில் வேறெந்த மொழியிலும் இருக்காதென்று துணிந்துச்சொல்லலாம்.

தமிழ்க்குடியில் பிறந்ததற்கு நாம் மீப்பெருமைகொள்ள வேண்டும். உலகில் பலமொழிகள் தோன்றுவதற்கு முன்னமே மொழியில் சிறந்துவிளங்கி வாழ்வியல் இலக்கணநெறிமுறைகளை வகுத்தோர் பெருமைமிகுதமிழர்களாகிய நாம்.

நண்பர்கள் நாள் வாழ்த்துப்பெருக்கு

தமிழரென நெஞ்சுயர்த்திப் பெருமைகொள் தமிழா

வாழ்க வள்ளுவம், வாழ்க தமிழம்

நன்றி
தனித்தமிழாளன்

No comments:

Post a Comment