இடையீர் போகா இளமுலை யாளையோர்
புடையீ ரேபுள்ளி மானுரி
உடையீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர்ச்
சடையீ ரேயும தாளே.
-- காழியர்கோன்
"வைய மீன்ற தொன்மக்க ளுளத்தினைக்
கையினா லுரை கால மிரிந்திடப்
பைய நாவை யசைத்த பசுந்தமிழ்
ஐயை தாடலைக் கொண்டு பணிகுவாம்”
வையம் ஈன்ற தொன்மக்கள் உளத்தினை
கையினாலுரை காலம் இரிந்திட
பைய நாவை அசைத்த பசுந்தமிழ்
ஐயை தாள்தலைக் கொண்டு பணிகுவாம்.
--- பெரும்புலவர் நீ.கந்தசாமியார்
"கரந்தைக்கட்டுரைகள்" என்னும் நூலிலிருந்து
No comments:
Post a Comment