Thursday, December 3, 2020

ஒன்பான் புலவரும் புரவலரும்

 புரவலரும் புலவரும் :


புலவர்: 

புலவர் என்போர், செய்யுள்களை (நூல்கள்) இயற்றும் புலமையுடையோர்.


புரவலர்: 

புரவலரென்போர் அந்த நூல்களை இயற்றும் புலவர்களுக்கு பொருளுதவியோடு பிறவுதவிகளனைத்தும் செய்வோர். (ஒரு அமைப்பிற்கோ நற்செயலுக்கோ அவற்றின் வளர்ச்சிக்கு உதவுபவர்). கொடையாளர், புரப்போர், பாதுகாப்பவர், ஆதரவாளர் என்பன புரவலரைக்குறிக்கும் பிறசொற்கள்.


"கையது கடன் நிறை யாழே மெய்யது புரவலர் இன்மையின் பசியே" (புற:69-2).


"அரவு உறை புற்றத்து அற்றே நாளும் புரவலர் புன்கண் நோக்காது" (புற:329:7).






புரவலரும் புலவரும் :


௧) பெருஞ்சேரலிரும்பொறையும் அரசில்கிழாரும்



௨) கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும்



௩) கணைக்காலிரும்பொறையும் பொய்கையாரும்


௪) பாரியும் கபிலரும்




௫) அதியமான் நெடுமானஞ்சியும் ஔவையாரும்




௬) சிறுகுடிபண்ணனும் கிள்ளிவளவனும்




௭) குமணனும் பெருந்தலைச்சாத்தனாரும்




௮) சடையப்பனும் கம்பரும்




௯) அநபாயனும் சேக்கிழாரும்




***************************************************


சிறியேன் பிறந்தவாண்டில் அதாவது ௧௯௮௯(1989) ஆம் ஆண்டு ஏழாம் வகுப்பிற்கான துணைப்பாடத்திட்டத்தில் ஒன்பது புலவர்கள் மற்றும் அப்புலவரைப்புரந்த புரவலரைப்பற்றிய கதையைப் பாடமாக வைத்திருந்தனர். வீட்டிலிருந்த பழையநூல்களை எடுத்து தூசிதட்டியபோது காணக்கிடைத்தது. 


சொற்கள் நல்லதமிழில் அமைந்திருந்தன. தனிசொற்றொடர்களாகவல்லாமல் பெரும்பாலும் தொடர் மற்றும் கலப்பு சொற்றொடர்களாவே இருந்தன. குறிப்பாக பிறமொழிக்கலப்பில்லை அந்நூலில். அதற்கும் மேலாக அறத்தன்மையும் கொடைத்தன்மையுடைய வரலாறுகளைப்பாடமாக வைத்திருந்தனர்.


 அவ்வாண்டுவரைகூட தமிழ்நாட்டுப்பள்ளிப்பாடநூல்களில் இத்தகைய பிறமொழிக்கலப்பில்லா நல்லதனித்தமிழில் அமைந்திருந்த அறம் சார்ந்த பாடங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் தற்போதோ பிறமொழிச்சொற்களை தமிழ்ச்சொற்களாகவே எண்ணுமளவிற்கு கலப்புடைய நூல்கள் தமிழ்நாட்டுப்பாடநூல் கழகத்தால் தயாரிப்படுகிறது. பள்ளிகளிலேயே இவ்வாறு நிகழ்ந்தால் அதைப்படித்து வளரும் பிள்ளைகளும் அதையே தமிழென்று நினைத்துக்கொண்டு அந்த பிறமொழிகலந்த தமிழையே பேசும்.


தற்போதைய இழிநிலையை மாற்றவேண்டிய கடமை தமிழ்நாட்டரசுக்கேயுரியது. இனத்தின் விழியாம் மொழியைக்காக்க அரசு பாடநூல்க்கழகமும் மக்களும் பாடுபடவேண்டியது இன்றியமையாதது. இதைச்செய்தோமானால் இனிவரும் பிள்ளைகள் பிறமொழிக்கலப்பின்றி நற்றமிழில் பேசும். மொழியும் இனமும் காக்கப்பட்டு நல்லறமும் இலக்கியவளமும் பெருகி பல்லாயிரமாண்டுகள் செழித்தோங்கும். 

நன்றி, வணக்கம்.

தனித்தமிழாளன்

2 comments:

  1. ஐயா, இதை தான் தேடி கொண்டு இருந்தேன் நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஐயா pdf இருந்தால் அனுப்பவும்.. நன்றி
      kumar333.krishna@gmail.com

      Delete