கரிகாற்வளவனின் பெயர்கள் :
"வென்வேல் உருவப்பஃறேர் இளையோன் சிறுவன்"
"கண்ணார் கண்ணி கரிகால் வளவன்".
"காவிரி புரக்கும் நாடு கிழவோன்".
- பொருநராற்றுப்படை.
"அரிமா அன்ன அணங்குடைத் துப்பின் திருமாவளவன்".
- பட்டினப்பாலை.
"இருநில மருங்கின் பொருநரைபெறா அச்
செரு வெங் காதலின் திருமாவளவன்".
- சிலப்பதிகாரம்.
"வெறுவரு தானையொடு வேண்டுபுலத்து இறுத்த
பெருவளக் கரிகால்".
"காய்சின மொய்ம்பின் பெரும்பெயர்க் கரிகால்".
"கழா அர் முன்றுறை கலிகொள் சுற்றமொடு கரிகால்".
- பரணர்.
"வளவ.!!! "- கருங்குழலாதனார்.
"நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக !!
களி அயல் யானைக் கரிகால் வளவ !! "
- வெண்ணிக்குயத்தியார்
மேற்கண்டவை, கரிகாற்பெருவளத்தானின் பெயர்கள் பயின்றுவரும் சில இலக்கிய வரிகள்.
நன்றி. வணக்கம்
தொகுப்பு : தமிழ் கோ விக்ரம்
No comments:
Post a Comment