மீப்பெரும் திருக்குறளுரை 5000 பக்கங்கள்:
திருக்குறளுக்குப் பலர் உரையெழுதியிருப்பினும் அவை யாவும் தமக்கு நிறைவாகயில்லையென்றெண்ணிய பாவலரேறு பெருஞ்சித்திரனார், அவர் சிறைப்படுத்தப்பட்ட 1975-76ஆம் ஆண்டு திருக்குறளுக்கு ஒரு மெய்ப்பொருளுரைகாணத் திட்டமிட்டார்.
முதலில் திட்டமிட்டது 5000 பக்கங்களுடன் 50000 குறிப்புகளடங்கிய உரைநூல். ஆனால், பின்னர் அது 8000 பக்கங்கள் நீளவும் வாய்ப்புள்ளதென்று அவரே கூறுகிறார். 1800 பக்கங்களை சிறையிலிருக்கும்போதே எழுதிமுடித்தார்.
(600 பக்கங்கள் கொண்ட 14 அல்லது 15 நூல் தொகுதிகளாக, அதாவது 9000 பக்கங்களாக எழுதுவது அவரின் திட்டம்).
இவ்வுரைநூலை சிற்றுரை என்றும் விரிவாக எழுத நேரமின்மையால் இயலவில்லையென்றும் கூறுகிறார் பெருஞ்சித்திரனார். 😲
அவ்வுரைநூலின் முன்னுரை மட்டுமே 300 பக்கங்கள். அறம் என்னும் சொல்லின் பொருளையும் அவ்வதிகாரத்தையும் விளக்க, அதற்கு மட்டுமே தனியாக வேறொரு முன்னுரை 66 பக்கங்கள். முதற்குறளுக்கு விளக்கம் 11 பக்கங்கள்.
வலைத்தளத்தில் எனக்கு 4 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. அதில், 240 குறட்பாக்களுக்கு மட்டுமே உரை உள்ளது. முன்னுரையோடு சேர்த்து 240 குறட்பாக்களின் உரை மட்டுமே 1200 பக்கங்கள்.
இவ்வுரைநூலே மிகப்பெரிய திருக்குறளுரை நூல் போலும்.
இவ்வளவிற்குக் கூடவா ஒரு உரைநூலை எழுதமுடியும்..!
பாவலரேறு பெருஞ்சித்திரனார் எத்தகைய பேரறிவாளரென்பதை சிறிதே நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.
(இவ்வுரைநூல் முழுவதும் கிடைக்காததால், அதன் மொத்த பக்கங்கள் 5000மா அன்றி 8000மா என்பதை அடியேனறியேன்).
நன்றி. வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்
திருக்குறளுக்குப் பலர் உரையெழுதியிருப்பினும் அவை யாவும் தமக்கு நிறைவாகயில்லையென்றெண்ணிய பாவலரேறு பெருஞ்சித்திரனார், அவர் சிறைப்படுத்தப்பட்ட 1975-76ஆம் ஆண்டு திருக்குறளுக்கு ஒரு மெய்ப்பொருளுரைகாணத் திட்டமிட்டார்.
முதலில் திட்டமிட்டது 5000 பக்கங்களுடன் 50000 குறிப்புகளடங்கிய உரைநூல். ஆனால், பின்னர் அது 8000 பக்கங்கள் நீளவும் வாய்ப்புள்ளதென்று அவரே கூறுகிறார். 1800 பக்கங்களை சிறையிலிருக்கும்போதே எழுதிமுடித்தார்.
(600 பக்கங்கள் கொண்ட 14 அல்லது 15 நூல் தொகுதிகளாக, அதாவது 9000 பக்கங்களாக எழுதுவது அவரின் திட்டம்).
இவ்வுரைநூலை சிற்றுரை என்றும் விரிவாக எழுத நேரமின்மையால் இயலவில்லையென்றும் கூறுகிறார் பெருஞ்சித்திரனார். 😲
அவ்வுரைநூலின் முன்னுரை மட்டுமே 300 பக்கங்கள். அறம் என்னும் சொல்லின் பொருளையும் அவ்வதிகாரத்தையும் விளக்க, அதற்கு மட்டுமே தனியாக வேறொரு முன்னுரை 66 பக்கங்கள். முதற்குறளுக்கு விளக்கம் 11 பக்கங்கள்.
வலைத்தளத்தில் எனக்கு 4 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. அதில், 240 குறட்பாக்களுக்கு மட்டுமே உரை உள்ளது. முன்னுரையோடு சேர்த்து 240 குறட்பாக்களின் உரை மட்டுமே 1200 பக்கங்கள்.
இவ்வுரைநூலே மிகப்பெரிய திருக்குறளுரை நூல் போலும்.
இவ்வளவிற்குக் கூடவா ஒரு உரைநூலை எழுதமுடியும்..!
பாவலரேறு பெருஞ்சித்திரனார் எத்தகைய பேரறிவாளரென்பதை சிறிதே நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.
(இவ்வுரைநூல் முழுவதும் கிடைக்காததால், அதன் மொத்த பக்கங்கள் 5000மா அன்றி 8000மா என்பதை அடியேனறியேன்).
நன்றி. வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்
No comments:
Post a Comment