தொல்காப்பிய நூல் தலைப்புகள் :
தொல்காப்பியம் என்பதே இன்று கிடைக்கப்பெறும் மிகப் பழைய தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் இலக்கண நூல் ஆகும். இதை எழுதியவர் தொல்காப்பியர் ஆவார். மிகப் பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவேயாகும். தொல்காப்பியம் அதன் சிறப்புப்பாயிரத்தொடு சேர்த்து ௧௬०௨ நூற்பாக்களால் ஆனது. இது எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என முப்பெருமதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதிகாரத்திற்கு ௯ இயல்கள் முறையே, ௨௭ இயல்களைக்கொண்டுள்ளது இந்நூல். இதற்குத் தொல்காப்பியரின் ஒருசாலை மாணாக்கராம் பனம்பாரனார் சிறப்புப் பாயிரம் பாடியுள்ளார். தொல்காப்பியத்தைதான் பயிலப்போவதில்லை நாம், குறைந்தளவு அந்நூலின் தலைப்புகளையாவது தெரிந்துகொள்வோம்.
சிறப்புப்பாயிரம்
எழுத்ததிகாரம்
௧. நூல் மரபு
௨. மொழி மரபு
௩. பிறப்பியல்
௪. புணரியல்
௫. தொகைமரபு
௬. உருபியல்
௭. உயிர்மயங்கியல்
௮. புள்ளிமயங்கியல்
௯. குற்றியலுகரப்புணரியல்
சொல்லதிகாரம்
௧. கிளவியாக்கம்
௨. வேற்றுமையியல்
௩. வேற்றுமைமயங்கியல்
௪. விளிமரபு
௫. பெயரியல்
௬. வினையியல்
௭. இடையியல்
௮. உரியியல்
௯. எச்சவியல்
பொருளதிகாரம்
௧. அகத்திணையியல்
௨. புறத்திணையியல்
௩. களவியல்
௪. கற்பியல்
௫. பொருளியல்
௬. மெய்ப்பாட்டியல்
௭. உவமயியல்
௮. செய்யுளியல்
௯. மரபியல்
நன்றி. வணக்கம்.
தமிழ் கோ விக்ரம்
No comments:
Post a Comment