Wednesday, April 22, 2020

புறநானூற்றின் பாட்டுடைத்தலைவர்கள் - 150 பேரின் பெயர்த்தொகுப்பு

புறநானூற்றுப் பாட்டுடைத்தலைவர்கள் - 150 :


புறநானூறு பாடப்பட்டோர் பெயர் பட்டியல் சேகரித்து தமிழெண்களிட்டு பதிந்துள்ளேன். நண்பர்கள் பலர் தம் குழந்தைகளுக்கு, தமிழ்ப்பெயரிட வேண்டும், நல்ல தமிழ்ப்பெயர் சொல்லுங்கள் என்று கேட்பர். அவர்கள், அடியேன் பதிவிட்ட புறநானூறு பாடியோர் பாடப்பட்டோர் மற்றும் பெண்பாற்புலவர்கள் ஆகிய பதிவுகளில் இருக்கும் தமிழ்ப்பெயர்களையும் இனி பதிவிடப்போகும் மற்ற புலவர்கள்,  பாட்டுடைத்தலைவர்களின் பெயர்களையும் தம் மக்களுக்கு சூட்டி களிப்புறலாமே.


புறநானூறு பாடப்பட்டோர் - ௧௫० பாட்டுடைத்தலைவர்கள் - 150 :


௧] அகுதை
௨] அண்டிரன்
௩] அதியமான் நெடுமான் அஞ்சி
௪] அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினி
௫] அந்துவஞ் சாத்தன்
௬] அந்துவன் கீரன்
௭] அம்பர் கிழான் அருவந்தை
௮] அவியன்
௯] ஆதன் அழிசி
௧०] ஆதனுங்கன்

௧௧] ஆந்தை
௧௨] ஆமூர் மல்லன்
௧௩] ஆய்
௧௪] ஆய் அண்டிரன்
௧௫] இயக்கன்
௧௬] இருங் கோவேள்
௧௭] இளங் கண்டீரக்கோ
௧௮] இளங் குமணன்
௧௯] இளந் தத்தன்
௨०] இள விச்சிக்கோ

௨௧] இள வெளிமான்
௨௨] ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்
௨௩] எயினன்
௨௪] எவ்வி
௨௫] எழினி
௨௬] ஏறைக்கோன்
௨௭] ஏனாதி திருக்கிள்ளி
௨௮] ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்
௨௯] ஓய்மான் நல்லியக்கோடன்
௩०] ஓய்மான் நல்லியாதன்

௩௧] ஓய்மான் வில்லியாதன்
௩௨] கடிய நெடு வேட்டுவன்
௩௩] கண்டீரக்கோப் பெரு நள்ளி
௩௪] கண்ணகி
௩௫] கந்தன்
௩௬] கபிலன்
௩௭] கரிகால் வளவன்
௩௮] கரும்பனூர் கிழான்
௩௯] காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி
௪०] கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி

௪௧] கிள்ளி வளவன்
௪௨] குமணன்
௪௩] கொண்கானங் கிழான்
௪௪] கோச் சேரமான் யானைக்கட் சேய் மாந்த ரஞ்சேரல் இரும்பொறை
௪௫] கோப்பெருஞ்சோழன்
௪௬] கோப்பெருஞ்சோழன் நடுகல்
௪௭] சிறுகுடி கிழான் பண்ணன்
௪௮] சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை
௪௯] சேரமான் கடலோட்டிய வெல்கெழு குட்டுவன்
௫०] சேரமான் கடுங்கோ வாழியாதன்

௫௧] சேரமான் கணைக்கால் இரும்பொறை
௫௨] சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை
௫௩] சேரமான் குட்டுவன் கோதை
௫௪] சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை
௫௫] சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்
௫௬] சேரமான் கோக்கோதை மார்பன்
௫௭] சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதையின் பெருங் கோப்பெண்டு
௫௮] சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன்
௫௯] சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன்
௬०] சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

௬௧] சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி
௬௨] சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ
௬௩] சேரமான் பெருஞ்சேரலாதன்
௬௪] சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன்
௬௫] சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
௬௬] சேரமான் மாரி வெண்கோ
௬௭] சேரமான் யானைக்கட் சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை
௬௮] சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை
௬௯] சேரமான் வஞ்சன்
௭०] சேரன் மாந்தரஞ்சேரல் இரும்பொறை

௭௧] சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந் தாயன்
௭௨] சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ் சாத்தன்
௭௩] சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி
௭௪] சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட் சென்னி
௭௫] சோழன் உருவப் பல் தேர் இளஞ்சேட் சென்னி
௭௬] சோழன் கரிகாற் பெருவளத்தான்
௭௭] சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்
௭௮] சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்
௭௯] சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்
௮०] சோழன் செங்கணான்

௮௧] சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி
௮௨] சோழன் நலங்கிள்ளி
௮௩] சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்
௮௪] சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி
௮௫] சோழன் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி
௮௬] சோழன் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளி
௮௭] சோழன் வேற் பல்தடக்கைப் பெருவிறற்கிள்ளி
௮௮] சோழிய ஏனாதி திருக்குட்டுவன்
௮௯] தந்து மாறன்
௯०] தருமபுத்திரன்

௯௧] தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன்
௯௨] தழும்பன்
௯௩] தாமான் தோன்றிக் கோன்
௯௪] தித்தன்
௯௫] தேர் வண் மலையன்
௯௬] தொண்டைமான்
௯௭] நம்பி நெடுஞ்செழியன்
௯௮] நலங்கிள்ளி
௯௯] நள்ளி
௧००] நன்னன்

௧०௧] நாஞ்சில் வள்ளுவன்
௧०௨] நாலை கிழவன் நாகன்
௧०௩] நெடியோன்
௧०௪] நெடுங்கிள்ளி
௧०௫] நெடுமான் அஞ்சி
௧०௬] நெடுவேள் ஆதன்
௧०௭] பண்ணன்
௧०௮] பரணன்
௧०௯] பரதவர்
௧௧०] பாண்டியன் அறிவுடைநம்பி

௧௧௧] பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
௧௧௨] பாண்டியன் கருங் கை ஒள் வாட் பெரும்பெயர் வழுதி
௧௧௩] பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி
௧௧௪] பாண்டியன் கீரஞ் சாத்தன்
௧௧௫] பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி
௧௧௬] பாண்டியன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன்
௧௧௭] பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன்
௧௧௮] பாண்டியன் நெடுஞ்செழியன்
௧௧௯] பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
௧௨०] பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி

௧௨௧] பாரி
௧௨௨] பாரி மகளிர்
௧௨௩] பிசிராந்தையார்
௧௨௪] பிட்டங்கொற்றன்
௧௨௫] புல்லி
௧௨௬] புலன் அழுக்கு அற்ற அந்தணாளன்
௧௨௭] பூத பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
௧௨௮] பேகன்
௧௨௯] பொகுட்டெழினி
௧௩०] பொறையாற்று கிழான்

௧௩௧] மல்லி கிழான் காரியாதி
௧௩௨] மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன்
௧௩௩] மலையமான் திருமுடிக்காரி
௧௩௪] மலையமான் மக்கள்
௧௩௫] மலையன்
௧௩௬] மாங்குடி மருதன்
௧௩௭] மாவளத்தான்
௧௩௮] முக்காவனாட்டு ஆமூர் மல்லன்
௧௩௯] மூவன்
௧௪०] யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை

௧௪௧] வல்லார் கிழான் பண்ணன்
௧௪௨] வல்வில் ஓரி
௧௪௩] வல்வில் வேட்டுவன்
௧௪௪] வாட்டாற்று எழினியாதன்
௧௪௫] விச்சிக்கோன்
௧௪௬] வெளிமான்
௧௪௭] வேங்கைமார்பன்
௧௪௮] வேள் எவ்வி
௧௪௯] வேள்பாரி
௧௫०] வையாவிக் கோப்பெரும் பேகன்

புறநானூறு பாடப்பட்டோர் பெயர்கள் முற்றுப்பெற்றன.

நன்றி. வணக்கம்.
தொகுப்பு : தமிழ் கோ விக்ரம்

No comments:

Post a Comment