Monday, April 27, 2020

தமிழ்நூல்களில் மலர்கள்

பழந்தமிழ் நூல்களில் நம் பழந்தமிழ் மலர்கள்


நம் பழந்தமிழ்நாட்டில் முன்னைக்காலத்தில் பலவகையான மலர்கள் இருந்திருக்கின்றன. இயற்கையோடு இயைந்திருந்த தமிழர்கள், அவர்கள்தம் இலக்கியங்களிலும் அம்மலர்களைக் குறிப்பிட்டுப்பாடியுள்ளனர். அத்தகைய மலர்களின் பெயர்களை வலைத்தளத்தில் தேடியெடுத்து, இங்கே உங்களோடு பகிர்ந்து, நம் தமிழகத்தில் இத்தனை மலர்கள் இருந்தனவா என்று வியந்து மகிழ்கிறேன். குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்ட 99 மலர்களின் பட்டியலை விடுத்து மற்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை மட்டும் இங்கே தொகுத்துள்ளேன். இப்பட்டியலில் குறிஞ்சிப்பாட்டின் மலர்களும் சிற்சில இடம்பெறும். அவை குறிஞ்சிப்பாட்டிலும் அந்தந்த நூல்களிலும் இடம்பெறுபவையாகும். நன்றி.

- தமிழ் கோ விக்ரம்




சிலப்பதிகாரம் தொகுத்துக் குறிப்பிடும் மலர்கள்


வைகையாற்று மணலில் பல்வகை மலர்கள் உதிர்ந்து கிடந்தன. இந்தத் தோற்றம் மகளிர் தம் இடையில் ஆடையின் மேல் அணியும் மேகலையில் பதிக்கப்பட்டுள்ள பல்வண்ண மணிகள் போல இருந்தது என்கிறார் இளங்கோவடிகள். இங்கு 24 மலர்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

1.(விரிமலர்) அதிரல்,
2.குடசம்
3.குரவம்
4.கோங்கம்
5.செண்பகம் = சண்பகம்
6.செருந்தி
7.சேடல்
8.தளவம்
9.திலகம்
10.நாகம்
11.(கொழுங்கொடிப்) பகன்றை
12.பிடவம்
13.மரவம்
14.வகுளம்
15.வேங்கை
16.ஓங்கல்
17.குருகு
18.கூதாளம்
19.வெண்கூதாளம்
20.பாடலம்
21.மயிலை
22.மருதம்
23.முசுண்டை
24.வெதிரம்

மணிமேகலை தொகுத்துக்கூறும் மலர்கள்


மணிமேகலை மலர்வனம் புக்க காதையில் புகார் நகரத்து வளர்ப்புப் பூங்காவில் இருந்த மலர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. மணிமேகலையின் சேவடி நிலத்தில் படாமல் இந்த மலர்கள் தாங்கிக்கொண்டனவாம். அவை,

1.இலவம் - எரிமலர் இலவம்,
2.குடசம்,
3.குரவம்,
4.குருந்து,
5.கொன்றை,
6.சண்பகம் – பெருஞ்சண்பகம்,
7.செருந்தி,
8.தளவம்,
9.தாழை - முடமுள் தாழை,
10.திலகம்,
11.நரந்தம்,
12.நாகம்,
13.பிடவம்,
14.புன்னை - பரந்து அலர் புன்னை,
15.மரவம்,
16.வகுளம்,
17.வெட்சி - செங்கால் வெட்சி,
18.வேங்கை,
19.(கொழும்பல்) அசோகம்,
20.வெதிரம்

பரிபாடல் 11-ல் தொகுக்கபட்ட மலர்கள் மற்றும் அவற்றில் சில மலர்களின் தன்மைகள் விளக்கப்பட்டுள்ளன. அவை,


1. கணவிரி
2. காந்தள்
3. சண்பகம் (வண்டு அறைஇய சண்பகம்)
4. சுரபுன்னை (கரையன சுரபுன்னை)
5. தோன்றி (காந்தள் தாய தோன்றி தீயென மலரும்)
6. நீலம் மலர் (ஊதை அவிழ்ந்த உடையிதழ் ஒண்ணீலம்)
7.புன்னாகம் (வரையன புன்னாகம்)
8.மாமரம் (தண்பத மனைமாமரம்)
9.வாள்வீரம்
10. வேங்கை (சினைவளர் வேங்கை)

பரிபாடல் எண் 12 தொகுத்துக் கூறும் மலர்கள்


பரிபாடல் எண் 12-ல் வையையாற்றுக் கரையில் மணக்கும் மலர்கள் சில தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. அவை.

1.அரவிந்தம்,
2.அல்லி,
3.கழுநீர்,
4.குல்லை,
5.சுரபுன்னை,
6.ஆம்பல்,
7.குருக்கத்தி,
8.சண்பகம் - மணங்கமழ் சண்பகம்,
9.நறவம்,
10.நாகம்- நல்லிணர் நாகம்,
11.பாதிரி,
12.மௌவல்,
13.வகுளம்.

ஐங்குறுநூற்றில் இளவேனிலில் மலரும் பூக்கள் என்று சில பூக்கள் தொகுத்துக் காட்டப்பட்டுள்ளன.

பாடல் எண் 341 முதல் 357

1.அதிரல் – ஐங்குறுநூறு எண் 345
2.எரிக்கொடி - 353
3.காயா - 412
4.குரவம் - 357
5.கொன்றை _  412
6.கோங்கம் –  343
7.தளவம் - 412
8.நுணவம் – 342
9.நெய்தல் - 412
10.பலா – 351
11.பாதிரி –  346
12.பிடவு - 412
13.புன்கு – 347
14.மரவம் -  357
15.மராஅம் – 348
16.மா – 349
17.முல்லை - 412
18.வேம்பு -  350

திருமுருகாற்றுப்படையில்


1.கணவீரம்(செவ்வரளி)

நாலடியாரில்


1.குவளை
2.ஆம்பல்
3.நெய்தல்
4.கொட்டி

திருக்குறளில் இடம்பெறும் மலர்கள் 


1.அனிச்சம்,
2.குவளை.

அடியேன் வலைத்தளத்தில் தேடிக்கிடைத்தவை இவ்வளவே. இதை படிக்கும் தமிழறிஞர்கள் இன்னும் பன்னூல்களில் பன்மலர்களுள்ளன நீரறியீர் என இகழ்ந்துரைக்காது, நீவீரறிந்த மலர்களை இங்கே பதிவிடுங்கள் என அன்போடு வேண்டுகிறேன்.

நன்றி. வணக்கம்
தமிழ் கோ விக்ரம்

No comments:

Post a Comment