Thursday, April 23, 2020

இலக்கியங்களில் தமிழ் தமிழர் தமிழ்நாடு

இலக்கியத்தில் தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் சொற்கள் இடம்பெற்ற வரிகளுள் சில :


மூத்தநூல் - தொல்காப்பியம் - சிறப்புப்பாயிரம்

வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகத்து

எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு


தமிழ் :


தமிழ் எனும் சொல் பல இடங்களில் வருகிறது.
முதன்மையானவை மட்டும்.

தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே
(புறநானூறு 58 )

அதூஉம் சாலும்நற் றமிழ்முழுது அறிதல்
(புறநானூறு 50 )

தமிழ் வையைத் தண்ணம் புனல்
(பரிபாடல் 6 )

தள்ளாப் பொருள் இயல்பின் தண்டமிழ் ஆய்வந்திலார்
கொள்ளார்
(பரிபாடல் 9 )

தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன்
(பரிபாடல் 4 )

தமிழர் :


தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து
(புறநானூறு 19 )
இருபுறமும் தமிழர் இறந்த தலையாலங்கான போர்.

மண்திணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்
(புறநானூறு 35 )
தமிழ்க் கிழவர் அதாவது தமிழ்த் தலைவர்.

தாதின் அனையர் தண்டதமிழ்க் குடிகள்
(பரிபாடல் 8 )
தமிழ்க்குடிகள் அதாவது தமிழ் மக்கள்.

அருந்தமிழர் ஆற்றல் அறியாது போரிட்ட கனகவிசயரை
(சிலப்பதிகாரம்)

தண்ணார மார்பிற் தமிழ்நர் பெருமானைக்
கண்ணாரக் காண
(முத்தொள்ளாயிரம் 24 )

தமிழர்நாடு :


தமிழர் ஆட்சி தமிழ்பேசாத நாடுகள் வரை பரவியிருந்தது.

தமிழ்கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த
(அகநானூறு 31 )

இமயமலை முதல் குமரிக்கடல் வரை தமிழ் பேசப்பட்டது.

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
(தொல்காப்பிய சிறப்புப் பாயிரம் )

தமிழரின் நாடு 'தண்டமிழ்' (தண்+தமிழ், தண் = குளிர்ச்சி) என்ற சொல்லால் குறிக்கப்பட்டுள்ளது.

தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டகம் எல்லாம்
(பரிபாடல் 9 )

தண்டமிழ் பொதுஎனப் பொறாஅன்
(புறநானூறு 51 )
தமிழ்நாடு எல்லாருக்கும் பொது என்றால் பொறுக்கமாட்டானாம்.
தனக்குத்தான் அது சொந்தம் என்பானாம்.

கொண்டி மிகைப்படத் தண்டமிழ் செறித்துக்
(பதிற்றுப்பத்து 63 )
செல்வம் பெருகிட தமிழர்நாட்டை இறுக்கி அதாவது சேர்த்து.

தமிழகப்படுத்த இமிழிசை முரசின்
(அகநானூறு 227 )
தமிழகம் எனும் சொல்.

இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத் தமிழ்முழுது அறிந்த
(சிலப்பதிகாரம்)

நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம்பு அறுத்த
தண்புனல் நல்நாட்டு
(சிலப்பதிகாரம்)

தென்தமிழ் நன்னாட்டு தீதுதீர் மதுரைக்கு
(சிலப்பதிகாரம்)

இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய
(சிலப்பதிகாரம்)

குமரி வேங்கடங் குணகுட கடலா
மண்டினி மருங்கில் தண்டமிழ் வரைப்பின்
செந்தமிழ் கொடுந்தமி ழென்றிரு பகுதியின்
(சிலப்பதிகாரம்)

தண்டமிழ் கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
தான் நிலைதிரியாத் தண்டமிழ் பாவை
(மணிமேகலை)
தமிழர்நாட்டு காலநிலை மாறி கோடை நீண்டாலும் தன் இயல்பு மாறாத தமிழ்ப்பெண் காவிரி.

யார் தமிழன்? ஏது தமிழ்? எங்கே தமிழர்நாடு? போன்ற வந்தேறித்தனமான கேள்விகளுக்கு இதற்கு மேலும் பதிலளிக்க முடியாது.

No comments:

Post a Comment