தமிழவைநூல்களில் தைத்திருநாள்:
தமிழவைநூல்கள் பலவும் தைத்திருநாளை சிறப்பாக எடுத்தியம்பியிருக்கின்றன. அவற்றுள் சிலவற்றை ஈண்டு காண்போம்.
1) தைஇத் திங்கள் தண்கயம் போல’ (புறம்-70)
2) தைஇத் திங்கள் தண்ணிய தரினும் (குறுந்தொகை-196)
3) தைஇத் திங்கள் தண்கயம் படியும்' (நற்றிணை-80)
4) தைஇ கின்ற தண்பெயல் கடை நாள் (அகம்-24)
5) ‘நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும் தைஇத் தண்கயம் போலப் பலர்படிந்து’ (ஐங்குறுநூறு-84)
6) தண்ணீர்த் தைஇ கின்ற பொழுதே' (நற்றிணை-124)
7) ‘வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர் தையூண் இருக்கையின்’ (நற்றிணை)
8 ) ‘வையெயிற்றவர்நாப்பண் வகையணிப் பொலிந்து
நீ தையினீ ராடிய தவந்தலைப் படுவயோ’ (கலித்தொகை)
9) ‘இழையணி ஆயமொடு தகுநாண் தடைஇத்
தைஇத் திங்கள் தண்கயம் படியும்
பெருந்தோட் குறுமகள்’ (கலித்தொகை)
10) அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல….’ (புறம் - 22)
என்று குறுங்கோழியூர்க்கிழார் எனும் புலவர் அறுவடை விழாவை சாறுகண்டகளம் என வருணிக்கின்றார்.
11) ‘மதுக்குலாம் அலங்கல் மாலை
மங்கையர் வளர்த்த செந்தீப்
புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்’ (சீவக சிந்தாமணி)
நன்றி. வணக்கம்
தமிழ் கோ விக்ரம்
No comments:
Post a Comment