Wednesday, April 22, 2020

நூல்களின் சிறப்பைப்பற்றி அறிஞர்களின் கூற்றுகள்

நூல்களின் சிறப்பு :


உலகப்புகழ்பெற்ற கவிஞர் சேக்சுபியரின் பிறந்தநாள் ஏப்ரல் 23. இதைத்தான் உலகப்புத்தக நாளாகக் கொண்டாடுகிறோம். (ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன் கொண்டாடுகிறோமென்று).


புத்தகங்களைப்பற்றி சிலவறிஞர்கள் கூறியவற்றை இங்கே காணலாம்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் :

“காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீயே(நூல்).. இந்தப் பாரிடைத் துயில்வோர் கண்ணில் பாய்ந்திடும் எழுச்சி நீதான்”.

பேரறிஞர் அண்ணா :

"வீட்டுக்கொரு புத்தக சாலை, நாட்டுக்கொரு நல்ல நிலை”.

கவிஞர் வால்ட் விட்மன் :

“புத்தகத்தைக் கையில் எடுக்கும்போது ஒரு மனிதனின் இதயத்தைக் கையில் எடுக்கிறீர்கள்”.

கார்லைல் :

“ஆட்சி அதிகாரத்தையே உலுக்கி விடும் பேராற்றல் ஒரு புத்தகத்திற்கு உண்டு”.

மார்ட்டின் லூதர்கிங் :

"துப்பாக்கிகளை விட பயங்கரமான ஆயுதங்கள்.. புத்தகங்கள்”

ஆல்பர்ட் ஐன்சுடீன் :

“மனிதனின் கண்டுபிடிப்புகளிலேயே மிகச் சிறந்தது புத்தகம் தான்”.

வின்சுடன் சர்ச்சில் :

"எனது முன்னேற்றங்கள் அனைத்திற்கும் ஒரே ஆசான்.. புத்தகங்கள் தான்”.

“குழந்தைகளுக்கு நீங்கள் வாங்கித்தரும் மிகச்சிறந்த பரிசு, புத்தகங்களே.”

சாமுவேல் சான்சன் :

“மனிதனின் கண்டுபிடிப்புகளிலேயே அற்புதமானதும் அதிக பயனுள்ளதும் புத்தகம் ஒன்றுதான்”.

ஹென்றி வார்ட் பீச்சர் :

“வீட்டை அலங்கரிக்க புத்தகங்களை விட அழகான பொருள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.”

பெரியார் :

பெண்கள் முன்னேற என்னதான் வழியென்று கேட்டபோது “முதலில் அவர்கள் கைகளிலுள்ள கரண்டிகளைப் பிடுங்கிவிட்டு புத்தகங்களைக் கொடுங்கள்”.

ஐசக் நியூட்டன் :

"ஒரு புத்தகம் நூறு நண்பர்களுக்குச் சமம்”.

சான் மில்டன் :

“ஒரு புத்தகத்தைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்குத்  தருபவனே மனிதகுலத்தின் உண்மையான விடிவெள்ளி”

அம்பேத்கர் :

ஒரு முறை வெளிநாடு சென்றிருந்த போது எங்கு தங்க விரும்புகிறீர்கள் எனக் கேட்டபோது "எந்த இடம் நூலகத்திற்கு அருகில் இருக்கிறது" எனக் கேட்டாராம்.

நேரு:

உங்களை ஒரு தனித் தீவிற்கு நாடு கடத்தினால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு “புத்தகங்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பேன்” என்றார்.

லெனின் :

பிறந்தநாள் பரிசு என்னவேண்டுமென மக்கள் கேட்க, "புத்தகம்" என்றாராம். லெனின் இறந்த போது “லெனின் வாசிப்பதை, சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்” என்று கூறினராம்.

பிளேட்டோ :

“ஒருவன் புத்தகங்களைப் படித்து புதிய விசயங்களைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பதை விட பிறவாமல் இருப்பதே நல்லது.”

சேம்சு ஆலன் :

“நீ எந்தப் புத்தகத்தைப் படிக்கிறாய், படித்திருக்கிறாய் என்பதைச் சொல்.. நீ யாரென்பதைச் சொல்கிறேன்”.

நன்றி.. வணக்கம்.

****************************************

தகவல் உதவி : வலைத்தளம்

No comments:

Post a Comment