புரட்சிக்கவிஞர் பாவேந்தர் கனகசுப்புரத்தினரின் பிறந்தநாள் இன்று. (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964)
..... சிறுத்தையே வெளியில் வா!
எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலியெனச் செயல்செயப் புறப்படு வெளியில்!
சிங்க இளைஞனே! திருப்பு முகம் திறவிழி!
இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா?
கைவிரித்து வந்த கயவர், நம்மிடைப் பொய் விரித்து நம் புலன்கள் மறைத்துத் தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி நமக்குள உரிமை தமக்கென்பார் எனில்
வழிவழி வந்தவுன் மறத்தனம் எங்கே?
மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக!
--- புரட்சிக்கவிஞர்
No comments:
Post a Comment