தமிழ் மொழியின் தனிச்சிறப்பு - கபிலரின் குறிஞ்சிப்பாட்டு:
99 மலர்கள் இடம்பெற்றுள்ள குறிஞ்சிப்பாட்டின் பாடல் வரிகள் இது. இப்பாடலில் உள்ள பல மலர்களை நாம் இதுவரை கண்டிரோம். கிடைத்தற்றகிய அம்மலர்களின் படங்கள்.
இத்தொண்ணூற்றொன்பது மலர்களின் படங்களைக் காண இங்கே சொடுக்குக.
https://m.facebook.com/vikramkumar.g.7/albums/469839543148455/?ref=opera_speed_dial
நூல் : குறிஞ்சிப்பாட்டு
பாடியவர் : கபிலர்
திணை : குறிஞ்சி
துறை : அறத்தொடுநிற்றல்
பாவகை : ஆசிரியம்
செங் காந்த ளாம்ப லனிச்சந்
தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி
செங்கொடு வேரி தேமா மணிச்சிகை
யுரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிள 65
மெரிபுரை யெறுழஞ் சுள்ளி கூவிரம்
வடவனம் வாகை வான்பூங் குடச
மெருவை செருவிளை மணிப்பூங் கருவிளை
பயினி வானி பல்லிணர்க் குரவம்
பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா 70
விரிமல ராவிரை வேரல் சூரல்
குரீஇப் பூளை குறுநறுங் கண்ணி
குறுகிலை மருதம் விரிபூங் கோங்கம்
போங்கந் திலகந் தேங்கமழ் பாதிரி
செருத்தி யதிரல் பெருந்தண் சண்பகங் 75
கரந்தை குளவி கடிகமழ் கலிமாத்
தில்லை பாலை கல்லிவர் முல்லை
குல்லை பிடவஞ் சிறுமா ரோடம்
வாழை வள்ளி நீணறு நெய்த
றாழை தளவ முட்டாட் டாமரை 80
ஞாழன் மெளவ னறுந்தண் கொகுடி
சேடல் செம்மல் சிறுசெங் குரலி
கோடல் கைதை கொங்குமுதிர் நறுவழை
காஞ்சி மணிக்குலைக் கட்கமழ் நெய்தல்
பாங்கர் மராஅம் பல்பூந் தணக்க 85
மீங்கை யிலவந் தூங்கிணர்க் கொன்றை
யடும்பம ராத்திரி நெடுங்கொடி யவரை
பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி
வஞ்சி பித்திகம் சிந் துவாரம்
தும்பை துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி 90
நந்தி நறவ நறும்புன் னாகம்
பாரம் பீரம் பைங்குருக் கத்தி
யாரங் காழ்வை கடியிரும் புன்னை
நரந்த நாக நள்ளிரு ணாறி
மாயிருங் குருந்தும் வேங்கையும் பிறவு 95
மரக்குவிரித் தன்ன பரேரம் புழகுடன்
மாலங் குடைய மலிவன மறுகி
வான்கண் கழீஇய வகலறைக் குவைஇப்
புள்ளா ரியத்த விலங்குமலைச் சிலம்பின்
வள்ளுயிர்த் தெள்விளி யிடையிடைப் பயிற்றிக.
-கபிலர்
நன்றி. வணக்கம்
தமிழ் கோ விக்ரம்
No comments:
Post a Comment