Thursday, April 23, 2020

புறநானூறு - பாடியோர், பாடப்பட்டோரின் பெயர்த்தொகுப்பு

புறநானூறு பாடினோரும் பாடப்பட்டோரும் - பெயர்த்தொகுப்பு :


(யார் யாரைப்பாடியது என்னும் பெயர்த்தொகுப்பு)

அன்புடைத் தமிழர்களே வணக்கம்.
தன்னிகரில்லாத் தமிழரின் புறவாழ்வின் சிறப்பைப்பேசும் பழந்தமிழ்க்கருவூலம் புறநானூறு. புலவர்கள் பலர் பலரைப்பாடிய ஒப்பற்ற இந்நூல் நானூறு செய்யுட்களைக்கொண்டது. அவர்களின் பெயர்களை புறநானூறு பாடியோர் என்றும் புறநானூறு பாடப்பட்டோர் என்றும் பன்னாட்களுக்கு முன்னமே தனித்தனியே அடியேனின் பதிவிட்டிருந்தது தாமனைவரும் அறிந்ததே. இருப்பினும், இப்பாக்கள் யார் யாரைப்பாடியது என்பதை தேடியறிவது அரிதான செயல். ஆகையால், அதனைத்தொகுத்து ஒரே பதிவில் கொண்டுவரவேண்டும் என்பது என்னுடைய பன்னாள் அவா. அதனால், அதைத்தொகுக்கும் பணியை மேற்கொண்டு ௪ நாட்களில் முடித்தேன்.

புறநானூறு என்பது பலரால் பலகாலங்களில் பலரைப்பாடிய தொகுப்பாகும். எனவே, இதில் தமிழவைக்கால பாக்களும் அதற்குப்பின்னே தோன்றிய பாக்களும் என்று இப்புறநானூற்றுநூல் தொகுக்கப்பட்ட காலத்திற்கு முன்புவரை தோன்றிய செய்யுள்கள் அடங்கி இருக்கும். இதில் பழந்தமிழ்ப்பாக்களும் ஆரியக்கதைகளும் அதன் குறிப்புகளுள்ள பாக்களும் என சேர்ந்தே இருக்கும். பாடிய பாடப்பட்டவர்களின் பெயர்களுள் சிலவும் அச்சார்புடையதாகவும் இருக்கும். உள்ளதை உள்ளவாறே தொகுத்துள்ளேன்.

செய்யுட்களை பாடினோர் பாடப்பட்டோர் பெயர்களை மட்டும் அறிவதோடமையாது. புறநானூறு நூலையும் குற்றமறக்கற்று தமிழறத்தோடு வாழ்க.

இப்பெயர்த்தொகுப்பு புறநானூறு நூலில் பயின்றுவரும் பண்டைத்தமிழ்ப்பெயர்களை அறியவிரும்புவோர்க்கு துணைபுரியும் அன்றி, குறிப்பிட்ட செய்யுள் யாரால் யாரைப்பாடியது என்று எளிதில் அறியவியலும்.

பாக்களின் எண்களை தமிழில் இட்டு, அச்செய்யுள் யாரை யார் பாடியது என்பதையும் பொதுப்பாகளுக்கு பாடியவர் பெயரை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்.  விருப்புளோர் படித்தறிக, வெறுப்புளோர் விடுத்தொழிக. நன்றி. வணக்கம்.

(0-०, 1-௧, 2-௨, 3-௩, 4-௩, 5-௫, 6-௬, 7-௭, 8-௮, 9-௯, 10-௰)

*********************************************



௧) இறைவனை பெருந்தேவனார் பாடியது.

௨) சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர் பாடியது.

௩) பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர்வழுதியை இரும்பிடர்த்தலையார் பாடியது.

௪) சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னியை பரணர் பாடியது.

௫) சேரமான் கருவூரேறிய ஒள்வாட்கோப்பெருஞ்சேரலை நரிவெரூஉத் தலையார் பாடியது.

௬) பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதியை காரிக்கிழார் பாடியது.

௭) சோழன் கரிகாற்பெருவளத்தானை கருங்குழல் ஆதனார் பாடியது.

௮) சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனை கபிலர் பாடியது.

௯) பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.

௰) சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை ஊன்பொதிபசுங்குடையார் பாடியது.

௧௧) சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோவை பேய்மகள் இளவெயினியார் பாடியது.

௧௨) பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.

௧௩) சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளியை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.

௧௪, ௧௫) சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனை கபிலர் பாடியது.

௧௬) சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியை பாண்டரங்கண்ணனார் பாடியது.

௧௭) சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையை குறுங்கோழியூர்கிழார் பாடியது.

 ௧௮) பாண்டியன் நெடுஞ்செழியனை குடபுலவியனார் பாடியது.

௧௯) பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை குடபுலவியனார் பாடியது.

௨०) சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையை குறுங்கோழியூர்கிழார் பாடியது.

௨௧) கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதியை ஐயூர் மூலங்கிழார் பாடியது.

௨௨) சேரமான் யானைக்கட் சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையை குறுங்கோழியூர் கிழார் பாடியது.

௨௩) பாண்டியன் தலையாலங் கானத்து நெடுஞ்செழியனை கல்லாடனார் பாடியது.

௨௪) பாண்டியன் தலையாலங்கானத்துச்செருவென்ற நெடுஞ்செழியனை மங்குடிக்கிழார் பாடியது.

௨௫) பாண்டியன் தலையாலங்கானத்துச்செருவென்ற நெடுஞ்செழியனை கல்லாடனார் பாடியது.

௨௬) பாண்டியன் தலையாலங்கானத்துச்செருவென்ற நெடுஞ்செழியனை மங்குடிக்கிழார் பாடியது.

௨௭ முதல் ௩௩ வரை) சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.

௩௪) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.

௩௫) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை வெள்ளைக்குடி நாகனார் பாடியது.

௩௬) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.

௩௭) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

௩௮) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை ஆவூர் மூலங்கிழார் பாடியது.

௩௯)  சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

௪०) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை ஆவூர் மூலங்கிழார் பாடியது.

௪௧) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை கோவூர்க்கிழார் பாடியது.

௪௨) ௩௭) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை இடைக்காடனார் பாடியது.

௪௩) சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானை தாமப்பல் கண்ணனார் பாடியது.

௪௪) சோழன் நெடுங்கிள்ளியை கோவூர்க்கிழார் பாடியது.

௪௫) சோழன் நலங்கிள்ளியையும் நெடுங்கிள்ளியையும் கோவூர்க்கிழார் பாடியது.

௪௬) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை கோவூர்க்கிழார் பாடியது.

௪௭) காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளியை கோவூர்க்கிழார் பாடியது.

௪௮, ௪௯) சேரமான் கோக்கோதை மார்பனை பொய்கையார் பாடியது.

௫०) சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையை மோசிகீரனார் பாடியது.

௫௧) பாண்டியன் கூடகாரத்துத்துஞ்சிய மாறன்வழுதியை ஐயூர் முடவனார் பாடியது.

௫௨) பாண்டியன் கூடகாரத்துத்துஞ்சிய மாறன்வழுதியை மருதனிளநாகனார் பாடியது.

௫௩) சேரமான் மாந்தரஞ்சேரலிரும்பொறையை பொருந்தில் இளங்கீரனார் பாடியது.

௫௪) சேரமான் குட்டுவன்கோதையை கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.

௫௫) பாண்டியன் இலவந்திகைப்பள்ளித்துஞ்சிய நன்மாறனை மதுரை மருதனிளநாகனார் பாடியது.

௫௬) பாண்டியன் இலவந்திகைப்பள்ளித்துஞ்சிய நன்மாறனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது. (மதுரை மருதன் இளநாகனார் எனவும் பாடம்).

௫௭) பாண்டியன் இலவந்திகைப்பள்ளித்துஞ்சிய நன்மாறனை காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

௫௮) சோழன் குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவனையும்
பாண்டியன் வெள்ளியம்பலத்துத்துஞ்சிய பெருவழுதியையும் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

௫௯) பாண்டியன் சித்திரமாடத்துத்துஞ்சிய நன்மாறனை மதுரைக்கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனார் பாடியது.

௬०) சோழன் குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.

௬௧) சோழன் இலவந்திகைப்பள்ளித்துஞ்சிய
நலங்கிள்ளி சேட்சென்னியை கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரைக்குமரனார் பாடியது.

௬௨) சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனையும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியையும் கழாத்தலையார் பாடியது.

௬௩) சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனையும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியையும் பரணர் பாடியது.

௬௪) பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதியை நெடும்பல்லியத்தனார் பாடியது.

௬௫) சேரமான் பெருஞ்சேரலாதன், இவன் கரிகாற் பெருவளத்தானோடு பொருது
புறப்புண்பட்டு, வடக்கிருந்தபோது கழாத்தலையார் பாடியது.

௬௬) சோழன் கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக்குயத்தியார் பாடியது.

௬௭) கோப்பெருஞ்சோழனை பிசிராந்தையார் பாடியது.

௬௮) சோழன் நலங்கிள்ளியை கோவூர்க்கிழார் பாடியது.

௬௯) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை ஆலந்தூர் கிழார் பாடியது.

௭०) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை ஆலந்தூர் கிழார் (கோவூரழகியார்) பாடியது.

௭௧) ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் பாடியது.

௭௨) பாண்டியன் தலையாலங்கானத்துச்செருவென்ற நெடுஞ்செழியன் பாடியது.

௭௩) சோழன் நலங்கிள்ளி பாடியது. (நல்லுருத்திரன் பாட்டு எனவும் பாடம்)

௭௪) சேரமான் கணைக்காலிரும்பொறை பாடியது.

௭௫) சோழன் நலங்கிள்ளி பாடியது.

௭௬, ௭௭, ௭௮, ௭௯) பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை இடைக்குன்றூர் கிழார் பாடியது.

௮०, ௮௧, ௮௨) சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளியை சாத்தந்தையார் பாடியது.

௮௩, ௮௪, ௮௫) சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளியை பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார் பாடியது.

௮௬) காவற்பெண்டு பாடியது (காதற்பெண்டு)

௮௭ முதல் ௧०௧ வரை) அதியமான் நெடுமானஞ்சியை ஔவையார் பாடியது.

௧०௨) அதியமான் நெடுமானஞ்சியின் மகன் பொகுட்டெழினியை ஔவையார் பாடியது.

௧०௩, ௧०௪) அதியமான் நெடுமானஞ்சியை ஔவையார் பாடியது.

௧०௫ முதல் ௧௧௧ வரை) வேள்பாரியை கபிலர் பாடியது.

௧௧௨) பாரி மகளிர் பாடியது.

௧௧௩ முதல் ௧௨० வரை) கபிலர் பாடியது.

௧௨௧, ௧௨௨, ௧௨௩, ௧௨௪) மலையமான் திருமுடிக்காரியை கபிலர் பாடியது.

௧௨௫) தேர்வண் மலையனை வடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார் பாடியது.

௧௨௬) மலையமான் திருமுடிக்காரியை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

௧௨௭ முதல் ௧௩௫ வரை) ஆய் அண்டிரனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.

௧௩௬) ஆய் அண்டிரனை துறையூர் ஓடைக்கிழார் பாடியது.

௧௩௭) நாஞ்சில் வள்ளுவனை ஒருசிறைப் பெரியனார் பாடியது.

௧௩௮, ௧௩௯) ஆய் அண்டிரனை மருதனிளநாகனார் பாடியது.

௧௪०) ஆய் அண்டிரனை ஔவையார் பாடியது.

௧௪௧, ௧௪௨) வையாவிக் கோப்பெரும் பேகனை பரணர் பாடியது.

௧௪௩, ௧௪௪, ௧௪௫) வையாவிக் கோப்பெரும் பேகனை கபிலர் பாடியது.

௧௪௬) வையாவிக் கோப்பெரும் பேகனை அரிசில்கிழார் பாடியது.

௧௪௭) வையாவிக் கோப்பெரும் பேகனை பெருங்குன்றூர்க்கிழார் பாடியது.

௧௪௮, ௧௪௯, ௧௫०) கண்டீரக்கோப்பெருநள்ளி வன்பரணர் பாடியது.

௧௫௧) இளவிச்சிக்கோவை பெருந்தலைச் சாத்தனார் பாடியது.

௧௫௨, ௧௫௩)
வல்வில்லோரியை வன்பரணர் பாடியது.

௧௫௪, ௧௫௫, ௧௫௬) கொண்கானங் கிழானை மோசிகீரனார் பாடியது.

௧௫௭) ஏறைக்கோனை குறமகள் இளவெயினியார் பாடியது.

௧௫௮, ௧௫௯, ௧௬०, ௧௬௧) குமணனை பெருஞ்சித்திரனார் பாடியது.

௧௬௨) இளவெளிமானை பெருஞ்சித்திரனார் பாடியது.

௧௬௩) பெருஞ்சித்திரனாரின் மனைவியை பெருஞ்சித்திரனார் பாடியது.

௧௬௪, ௧௬௫) குமணனை பெருந்தலைச் சாத்தனார் பாடியது.

௧௬௬) சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயனை ஆவூர் மூலங்கிழார் பாடியது.

௧௬௭) சோழன் கடுமான்கிள்ளியை கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக்குமரனார் பாடியது.

௧௬௮) பிட்டங்கொற்றனை கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் பாடியது.

௧௬௯) பிட்டங்கொற்றனை காவிரிபூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

௧௭०) பிட்டங்கொற்றனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.

௧௭௧) பிட்டங்கொற்றனை காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

௧௭௨) பிட்டங்கொற்றனை வடமண்ணக்கன் தாமோதரனார் பாடியது.

௧௭௩) சிறுகுடிக்கிழான் பண்ணனை சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன் பாடியது.

௧௭௪) மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

௧௭௫) ஆதனுங்கனை கள்ளில் ஆத்திரையனார் பாடியது.

௧௭௬) ஓய்மான் நல்லியக் கோடானை புறத்திணை நன்னாகனார் பாடியது.

௧௭௭) மல்லி கிழான் காரியாதியை ஆவூர் மூலங்கிழார் பாடியது.

௧௭௮) பாண்டியன் கீரஞ்சாத்தனை (பாண்டிக் குதிரைச்சாக்கையன்) ஆவூர் மூலங்கிழார் பாடியது.

௧௭௯) நாலைக்கிழவன் நாகனை வடநெடுந்தத்தனார் பாடியது.

௧௮०) ஈர்ந்தூர்க்கிழான் தோயனை கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக்குமரனார் பாடியது.

௧௮௧) வல்லார் கிழான் பண்ணனை சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் பாடியது.

௧௮௨) கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாடியது.

௧௮௩) ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் பாடியது.

௧௮௪) பாண்டியன் அறிவுடை நம்பியை பிசிராந்தையார் பாடியது.

௧௮௫) தொண்டைமான் இளந்திரையன் பாடியது.

௧௮௬) மோசிகீரனார் பாடியது.

௧௮௭) ஔவையார் பாடியது.

௧௮௮) பாண்டியன் அறிவுடைநம்பி பாடியது.

௧௮௯) மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

௧௯०) சோழன் நல்லுருத்திரன் பாடியது.

௧௯௧) பிசிராந்தையார் பாடியது.

௧௯௨) கணியன் பூங்குன்றன் பாடியது.

௧௯௩) ஓரேருழவர் (ஓர் ஏர் உழவர்) பாடியது.

௧௯௪) பக்குடுக்கை நன்கணியார் பாடியது.

௧௯௫) நரிவெரூஉத் தலையார் பாடியது.

௧௯௬) பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை ஆவூர் மூலங்கிழார் பாடியது.

௧௯௭) சோழன் குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளவனை கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார் பாடியது.

௧௯௮) பாண்டியன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறனை வடமவண்ணக்கண் பேரிசாத்தனார் பாடியது.

௧௯௯) பெரும்பதுமனார் பாடியது.

௨००) கபிலர் பாடியது.

௨०௧, ௨०௨) இருங்கோவேளை கபிலர் பாடியது.

௨०௩) சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.

௨०௪) வல்வில் ஓரியை கழைதின் யானையார் பாடியது.

௨०௫) கடிய நெடுவேட்டுவனை பெருந்தலைச்சாத்தனார் பாடியது.

௨०௬) அதியமான் நெடுமானஞ்சியை ஔவையார் பாடியது.

௨०௭) இளவெளிமானை பெருஞ்சித்திரனார் பாடியது.

௨०௮) அதியமான் நெடுமானஞ்சியை பெருஞ்சித்திரனார் பாடியது.

௨०௯) மூவனை பெருஞ்சித்திரனார் பாடியது.

௨௧०, ௨௧௧) சேரமான் குடக்கோச் சேரலிரும்பொறையை பெருங்குன்றூர் கிழார் பாடியது.

௨௧௨) கோப்பெருஞ்சோழனை பிசிராந்தையார் பாடியது.

௨௧௩) கோப்பெருஞ்சோழனை புல்லாற்றூர் எயிற்றியனார் பாடியது. (கோப்பெருஞ்சோழன் தன் மக்கள்மேற் போருக்கு எழுந்தகாலைப்பாடிச் சந்து செய்தது)

௨௧௪) கோப்பெருஞ்சோழன் பாடியது.

௨௧௫) கோப்பெருஞ்சோழன் பாடியது. (சோழன் வடக்கிருந்தான், பிசிராந்தையார் வருவார் என்றான். 'அவர் வாரார்' என்றனர் சான்றோருட் சிலர். அவர்க்கு அவன் கூறிய செய்யுள் இது)

௨௧௬) கோப்பெருஞ்சோழன் பாடியது. (வடக்கிருந்த சோழன், பிசிராந்தையாருக்கும் தன்னருகே இடன் ஒழிக்க என்று கூறிய செய்யுள் இது.)

௨௧௭) பொத்தியார் பாடியது. (கோப்பெருஞ் சோழன் சொன்னவாறே பிசிராந்தையார் அங்கு வந்தனர். அதனைக் கண்டு வியந்த பொத்தியார் பாடிய செய்யுள் இது)

௨௧௮) கண்ணகனார் (நத்தத்தனார்) பாடியது. (பிசிராந்தையார் வடக்கிருந்தார், அதனைக் கண்டு பாடியது)

௨௧௯) கோப்பெருஞ் சோழனை பெருஞ்கருவூர்ச்சதுக்கத்துப் பூதநாதனார் பாடியது.

௨௨०) பொத்தியார் பாடியது. (சோழன் வடக்கிருந்தான். அவன்பாற் சென்ற பொத்தியார், அவனால் தடுக்கப்பட்டு உறையூர்க்கு மீண்டார், சோழன் உயிர் நீத்தான். அவனன்றி வறிதான உறையூர் மன்றத்தைக் கண்டு இரங்கிப் பொத்தியார் பாடிய செய்யுள் இது).

௨௨௧) கோப்பெருஞ்சோழனை பொத்தியார் பாடியது. (சோழனது நடுகற்கண்டு பாடிய செய்யுள் இது)

௨௨௨) கோப்பெருஞ்சோழனை பொத்தியார் பாடியது. (தன்மகன் பிறந்தபின், சோழனது நடுகல் நின்ற இடத்திற்குச்சென்று, தாமும் உயிர்விடத்துணிந்த பொத்தியார், 'எனக்கும் இடம் தா' எனக்கேட்டுப் பாடியது இச்செய்யுள்).

௨௨௩) கோப்பெருஞ்சோழனை பொத்தியார் பாடியது.

௨௨௪) சோழன் கரிகாற்பெருவளத்தானை கருங்குழல் ஆதனார் பாடியது.

௨௨௫) சோழன் நலங்கிள்ளியை ஆலத்தூர் கிழார் பாடியது.

௨௨௬) சோழன் குளுமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

௨௨௭) சோழன் குளுமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை ஆடுதுறை மாசாத்தனார் பாடியது.

௨௨௮) சோழன் குளுமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை ஐயூர் முடவனார் பாடியது.

௨௨௯) கோச்சேரமான் யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையை கூடலூர்க்கிழார் பாடியது. (அவன் இன்ன நாளில் துஞ்சுமென அஞ்சி, அவன் அவ்வாறே துஞ்சிய போது பாடியது).

௨௩०) அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியை அரிசில் கிழார் பாடியது.

௨௩௧, ௨௩௨) அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.

௨௩௩, ௨௩௪) வேள் எவ்வியை வெள்ளெருக்கிலையார் பாடியது.

௨௩௫) அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.

௨௩௬) கபிலர் பாடியது. (வேள்பாரி துஞ்சியபின், அவன் மகளிரைப் பார்ப்பார்ப்படுத்து வடக்கிருந்தபோது, பாடியது).

௨௩௭) இளவெளிமானை பெருஞ்சித்திரனார் பாடியது. (வெளிமானிடம் சென்றனர் புலவர். அவன் துஞ்ச, இளவெளிமான் சிறிது கொடுக்கின்றான். அதனைக் கொள்ளாது வெளிமான் துஞ்சியதற்கு இரங்கிப் பாடிய செய்யுள் இது).

௨௩௮) இளவெளிமானை பெருஞ்சித்திரனார் பாடியது. (வெளிமான் துஞ்சியமைக்கு வருந்திக் கூறியது இது. கரைகாண வியலாத் துயரத்தைக், 'கண்ணில் ஊமன் கடற் பட்டாங்கு' எனக் கூறுதலைக் கவனிக்க.)

௨௩௯) நம்பி நெடுஞ்செழியனை பேரெயின் முறுவலார் பாடியது.

௨௪०) ஆயை குட்டுவன் கீரனார் பாடியது.

௨௪௧) ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.

௨௪௨) ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனை குடவாயிற்தீரத்தனார் (கடவாயில் நல்லாதனார்) பாடியது.

௨௪௩) தொடித்தலை விழுத்தண்டினார் பாடியது.

௨௪௪) பாடப்பட்டோரும் பாடினோரும் அறியவியலாவளவிற்கு சிதைந்தே கிடைத்தது இப்பா.

௨௪௫) சேரமான் கோட்டம்பலத்துத்துஞ்சிய மாக்கோதை பாடியது.

௨௪௬) பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு பாடியது.

௨௪௭) பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டை மதுரைப் பேராலவாயர் பாடியது.

௨௪௮) ஒக்கூர் மாசாத்தனார் பாடியது.

௨௪௯) தும்பி சொகினனார் (தும்பிசேர் கீரனார்) பாடியது.

௨௫०) தாயங்கண்ணியார் பாடியது.

௨௫௧, ௨௫௨) மாற்பித்தியார் பாடியது.

௨௫௩) குளம்பாதாயனார் பாடியது.

௨௫௪) கயமனார் பாடியது.

௨௫௫) வன்பரணர் பாடியது.

௨௫௬, ௨௫௭) பாடியவர் பெயர் தெரிந்திலது.

௨௫௮) உலோச்சனார் பாடியது.

௨௫௯) கோடை பாடிய பெரும்பூதனார் பாடியது.

௨௬०) வடமோதங்கிழார் பாடியது.

௨௬௧) ஆவூர் மூலங்கிழார் பாடியது.

௨௬௨) மதுரைப் பேராலவாயர் பாடியது.

௨௬௩) பாடியவர் பெயர் தெரிந்திலது.

௨௬௪) உறையூர் இளம்பொன் வாணிகனார் பாடியது.

௨௬௫) சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் பாடியது.

௨௬௬) சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னியை பெருங்குன்றூர் கிழார் பாடியது.

௨௬௭, ௨௬௮) இப்பாக்களின் படிகள் கிடைத்தில.

௨௬௯) ஒளவையார் பாடியது.

௨௭०) கழாத்தலையார் பாடியது.

௨௭௧) வெறிபாடிய காமக்கண்ணியார் பாடியது.

௨௭௨) மோசிசாத்தனார் பாடியது.

௨௭௩) எருமை வெளியனார் பாடியது.

௨௭௪) உலோச்சனார் பாடியது.

௨௭௫) ஒரூஉத்தனார் பாடியது.

௨௭௬) மாதுரைப் பூதனிளநாகனார் பாடியது.

௨௭௭) பூங்கணுத்திரையார் பாடியது.

௨௭௮) காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடியது.

௨௭௯) ஒக்கூர் மாசாத்தியார் பாடியது.

௨௮०) மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

௨௮௧) அரிசில் கிழார் பாடியது.

௨௮௨) பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடியது.

௨௮௩) அடைநெடுங் கல்வியார் பாடியது.

௨௮௪) ஓரம் போகியார் பாடியது.

௨௮௫) அரிசில் கிழார் பாடியது.

௨௮௬) ஒளவையார் பாடியது.

௨௮௭) சாத்தந்தையார் பாடியது.

௨௮௮, ௨௮௯) கழாத்தலையார் பாடியது.

௨௯०) ஒளவையார் பாடியது.

௨௯௧) நெடுங்கழுத்துப்பரணர் பாடியது.

௨௯௨) விரிச்சியூர் நன்னாகனார் பாடியது.

௨௯௩) நொச்சி நியமங்கிழார் பாடியது.

௨௯௪) பெருந்தலைச் சாத்தனார் பாடியது.

௨௯௫) ஔவையார் பாடியது.

௨௯௬) வெள்ளை மாளர் பாடியது.

௨௯௭) பாடியவர் பெயர் கிடைத்தில.

௨௯௮) ஆவியார் பாடியது.

௨௯௯) பொன்முடியார் பாடியது.

௩००) அரிசில் கிழார் பாடியது.

௩०௧) ஆவூர் மூலங்கிழார் பாடியது.

௩०௨) வெறிபாடிய காமக் கண்ணியார் பாடியது.

௩०௩) எருமை வெளியனார் பாடியது.

௩०௪) அரிசில்கிழார் பாடியது.

௩०௫) மதுரை வேளாசானார் பாடியது.

௩०௬) அள்ளூர் நன்முல்லையார் பாடியது.

௩०௭) பெயர் கிடைத்தில.

௩०௮) கோவூர்க்கிழார் பாடியது.

௩०௯) மதுரை இளங்கண்ணிக்கௌசிகனார் பாடியது.

௩௧०) பொன்முடியார் பாடியது.

௩௧௧) ஒளவையார் பாடியது.

௩௧௨) பொன்முடியார் பாடியது.

௩௧௩) மாங்குடி மருதனார் பாடியது.

௩௧௪) ஐயூர் முடவனார் பாடியது.

௩௧௫) அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.

௩௧௬) மதுரைக் கள்ளிற்கடையத்தன் வெண்ணாகனார் பாடியது.

௩௧௭) வெம்பற்றூர்க்குமரனார் பாடியது.

௩௧௮) பெருங்குன்றூர் கிழார் பாடியது.

௩௧௯) ஆலங்குடி வங்கனார் பாடியது.

௩௨०) வீரை வெளியனார் பாடியது.

௩௨௧) உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.

௩௨௨) ஆவூர்கிழார் பாடியது.

௩௨௩) பெயர்கள் கிடைத்தில

௩௨௪) ஆலத்தூர் கிழார் பாடியது.

௩௨௫) உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.

௩௨௬) தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் பாடியது.

௩௨௭, ௩௨௮) பெயர்கள் கிடைத்தில.

௩௨௯) மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் பாடியது.

௩௩०) மதுரை கணக்காயனார் பாடியது.

௩௩௧) உறையூர் முதுகூத்தனார் (உறையூர் முது கூற்றனார்) பாடியது.

௩௩௨) விரியூர் கிழார் பாடியது.

௩௩௩) பெயர்கள் கிடைத்தில.

௩௩௪) மதுரைத் தமிழக்கூத்தனார் பாடியது.

௩௩௫) மாங்குடிக்கிழார் பாடியது.

௩௩௬) பரணர் பாடியது.

௩௩௭) கபிலர் பாடியது.

௩௩௮) குன்றூர்க்கிழார் மகனார் பாடியது.

௩௩௯, ௩௪०) பெயர்கள் கிடைத்தில.

௩௪௧) பரணர் பாடியது.

௩௪௨) அரிசில் கிழார் பாடியது.

௩௪௩) பரணர் பாடியது.

௩௪௪, ௩௪௫) அடைநெடுங்கல்வியார் பாடியது. பாடப்பட்டோன் பெயர் கிடைத்தில.

௩௪௬) அண்டர்மகன் குறுவழுதி பாடியது.

௩௪௭) கபிலர் பாடியது.

௩௪௮) பரணர் பாடியது.

௩௪௯) மதுரை மருதனிளநாகனார் பாடியது.

௩௫०) மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தார் ஆயத்தனார் பாடியது.

௩௫௧) மதுரைப் படைமங்க மன்னியார் பாடியது.

௩௫௨) பரணர் பாடியது.

௩௫௩) காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

௩௫௪) பரணர் பாடியது.

௩௫௫) பெயர்கள் கிடைத்தில.

௩௫௬) தாயங்கண்ணனார் பாடியது.

௩௫௭) பிரமனார் பாடியது.

௩௫௮) வான்மீகியார் பாடியது.

௩௫௯) கரவட்டனார் பாடியது.

௩௬०) சங்க வருணர் என்னும் நாகரியர் பாடியது.

௩௬௧) பெயர்கள் கிடைத்தில.

௩௬௨) சிறுவெண்டேரையார் பாடியது.

௩௬௩) ஐயாதிச் சிறுவெண்டேரையார் பாடியது.

௩௬௪) கூகைக் கோரியார் பாடியது.

௩௬௫) மார்க்கண்டேயனார் பாடியது.

௩௬௬) தருமபுத்திரனை கோதமனார் பாடியது.

#_௩௬௭) சேரமான் மாரிவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப்பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந்தாரை ஔவையார் பாடியது. (மூவேந்தரையும் ஒருங்கே பாடிய சிறப்புடையது இப்பா)

௩௬௮) சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் கழாத் தலையார் பாடியது.

௩௬௯) சேரமான் கடலோட்டிய வெல்கெழுகுட்டுவனை பரணர் பாடியது.

௩௭०) சோழன் செரப்பாழி இறிந்த இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.

௩௭௧) பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை கல்லாடனார் பாடியது.

௩௭௨) பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை மாங்குடிக்கிழார் பாடியது.

௩௭௩) சோழன் குராப்பள்ளித்துஞ்சிய கிள்ளிவளவனை கோவூர்கிழார் பாடியது.

௩௭௪, ௩௭௫) ஆய் அண்டிரனை உறையூர் ஏணிச்சேர் முடமோசியார் பாடியது.

௩௭௬) ஓய்மான் நல்லியாதனை புறத்திணை நன்னாகனார் பாடியது.

௩௭௭) சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியை உலோச்சனார் பாடியது.

௩௭௮) சோழன் செரப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.

௩௭௯) ஓய்மான்வில்லியாதனை புறத்திணை நன்னாகனார் பாடியது.

௩௮०) நாஞ்சில் வள்ளுவனை கருவூர்க்கதப்பிள்ளை பாடியது.

௩௮௧) கரும்பனூர் கிழானை புறத்திணை நன்னகனார் பாடியது.

௩௮௨) சோழன் நலங்கிள்ளியை கோவூர் கிழார் பாடியது.

௩௮௩) மாறோக்கத்து நப்பசலையார் பாடியது. பாடப்பட்டோன் பெயர் கிடைத்தில. (கடுந்தேர் அவியனென ஒருவனை உடையேன்' என்று குறித்தது கொண்டு,அவனைப் பாடியதாகக் கொள்ளலும் பொருந்தும்).

௩௮௪) கரும்பனூர் கிழானை புறத்திணை நன்னாகனார் பாடியது.

௩௮௫) அம்பர்கிழான் அருவந்தையை கல்லாடனார் பாடியது.

௩௮௬) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை கோவூர் கிழார் பாடியது.

௩௮௭) சேரமான் சிக்கற்பள்ளித்துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதனை குண்டுகட் பாலியாதனார் பாடியது.

௩௮௮) சிறுகுடிகிழான் பண்ணனை மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் பாடியது.

௩௮௯) நல்லேர் முதியன் ஆதனுங்கனை கள்ளில் ஆத்திரையனார் பாடியது.

௩௯०) அதியமான் நெடுமானஞ்சியை ஔவையார் பாடியது

௩௯௧) பொறையாற்றுக் கிழானை கல்லாடனார் பாடியது.

௩௯௨) அதியமான் நெடுமானஞ்சியின்மகன் பொகுட்டெழினியை ஒளவையார் பாடியது.

௩௯௩) சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை நல்லிறையனார் பாடியது.

௩௯௪) சோழிய ஏனாதி திருக்குட்டுவனை கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார் பாடியது.

௩௯௫) சோழநாட்டு பிடவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தனை மதுரை நக்கீரனார் பாடியது.

௩௯௬) வாட்டாற்று எழினியாதனை மாங்குடி கிழார் பாடியது.

௩௯௭) கோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனனை எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார் பாடியது.

௩௯௮) சேரமான் வஞ்சனை திருத்தாமனார் பாடியது.

௩௯௯) தாமான் தோன்றிக்கோனை ஐயூர் முடவனார் பாடியது.

௪००) சோழன் நலங்கிள்ளியை கோவூர்க்கிழார் பாடியது.

**********************************************

உதவி : பல பதிப்பகத்துப் புறநானூறு நூல் பதிப்புகள் மற்றும் இணையம்

நன்றி. வணக்கம்
தொகுப்பு : தமிழ் கோ விக்ரம்

No comments:

Post a Comment