ஆண்டாளின் நாச்சியார் திருமொழிகள் சில :
சேய்த்தீர்த்தமாய்நின்ற செங்கண்மால் தன்னுடைய
வாய்த்தீர்த்தம் பாய்ந்தாடவல்லாய் வலம்புரியே
அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரித் தெழுந்த என் தடமுலைகள்
ஊனிடை யாழிசங் குத்தமர்க்கென்று
உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்
மானிடவர்க் கென்று பேச்சுப்படில்
வாழகில் லேன்கண்டாய் மன்மதனே.
உருவுடை யாரிழை யார்கள்நல்லார்
ஓத்துவல் லார்களைக் கொண்டு வைகல்
தேசமுன் னளந்தவன் திரிவிக்கிரமன்
திருகைக ளால்லென்னைத் தீண்டும்வண்ணம்
சாயுமென் வயிறுமென் தடமுலையும்
தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே
பொங்கியபாற்கடல் பள்ளிகொள் வானைப்
புணர்வதோராசையினால் என் கொங்கைகிளர்ந்து குமைத்துக்குதுகலித்து
தன்னாகத் திருமங்கை தங்கியசீர் மார்வர்க்கு
தன்னாகத் திளங்கொங்கை விரும்பித்தாம் நாள்தோறும்
அவன் மார்பணிந்த வனமாலை
வஞ்சியாதே தருமாகில் மார்பில் கொணர்ந்து புரட்டீரே
ஆராவமுத மனையான் அமுதவாயிலூறிய
நீர்தான் கொணர்ந்து புலராமே
பருக்கி இளைப்பை நீக்கீரே
தழையின் பொழில்வாய் நிரைப்பின்னே நெடுமாலூதிவருகின்ற
குழலின் தொளைவாய் நீர்கொண்டு குளிர முகத்துத் தடவீரே
குற்றமற்ற முலைதன்னைக் குமரன் கோலப் பணைத்தோளோடு
அற்றகுற்றமவைதீர அணைய அமுக்கிக் கட்டீரே.
கொள்ளும் பயனொன்றில்லாத கொங்கைதன்னை கிழங்கோடும்
அள்ளிப்பறித்திட்டு அவன்மார்விலெறிந்து என்னழலை தீர்வேனே
கொம்மை முலைகள் இடர்தீர கோவிந்தற்கு ஓர் குற்றேவல்
நன்றி. வணக்கம்
தமிழ் கோ விக்ரம்
No comments:
Post a Comment